தனி ஆவர்த்தனம் தொடங்கிய ஃபியட்: ஷோரூம் திறப்பில் மும்முரம்

Fiat Showroom
டாடாவை உதறித் தள்ளிவிட்டு தனி ஆவர்த்தனம் துவங்கியிருக்கும் ஃபியட் நிறுவனம் தனக்கென பிரத்யேக கார் ஷோரூம்களை திறப்பதில் படு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் புதிதாக 100 டீலர்ஷிப்புகளை ஃபியட் திறக்க உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறந்து வரும் அந்த நிறுவனம் நேற்று டெல்லி அருகே நொய்டாவில் பிரம்மாண்ட ஷோரூமை திறந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 70 புதிய ஷோரூம்களை திறக்க உள்ளது.

தனது பிராண்டில் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ள ஃபியட், தனது அங்கமாக செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டின் புதிய பிரிமியம் எஸ்யூவி கார்களையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதனால், புதிய ஷோரூம்களை உலகத் தரத்தில் இருக்கும் வகையில் திறந்து வருகிறது ஃபியட். இதுதவிர, நாட்டின் முக்கிய நகரங்களில் கஃபே கான்செப்ட் ஷோரூம்களையும் திறக்க ஃபியட் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
English summary
Italian Car maker Fiat Group Automobiles has announced it will open 100 exclusive dealerships across the country by the end of this year.
Story first published: Friday, January 11, 2013, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X