Just In
- 17 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு... குவாட்ரிசைக்கிளை அனுமதிப்பதில் அரசுக்கு சிக்கல்!!
கார் நிறுவனங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி தருவதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. எனவே, குவாட்ரிசைக்கிள்கள் மார்க்கெட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்டோரிக்ஷாவைவிட பெரியதாகவும், கார்களைவிட சிறியதாகவுமான புதிய நான்கு சக்கர பயணிகள் வாகனங்களை குவாட்ரிசைக்கிள் என்றழைக்கப்படுகின்றன. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற பெயரில் முதல் குவாட்ரிசைக்கிளை தயாரித்துள்ளது.
இந்த புதிய ரக வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தது. குவாட்ரிசைக்கிள்களை சாலையில் இயக்குவதற்கான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை நிபுணர் குழுவை அமைத்து மத்திய அரசு தயாரித்தது.
இதன்படி, தயாரிக்கப்படும் குவாட்ரிசைக்கிள் வாகனங்களை அக்டோபர் முதல் இயக்குவதற்கு அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி தருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் உயரதிகாரிகள் நேற்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னான்டசையும் சந்தித்து பேசினர். அப்போது, குவாட்ரிசைக்கிள் வாகனங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் மிக குறைவான குவாட்ரிசைக்கிள்களால் அதிக விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த குவாட்ரிசைக்கிள் வாகனங்களை தயாரிக்க 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தங்களுக்கு கால அவகாசமும் கேட்டுள்ளன.
கார் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக குவாட்ரிசைக்கிள்கள் வருவதில் கால தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!