Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உலகின் அதிவேக கார் திட்டத்தில் இந்திய வம்சாவளி பெண் எஞ்சினியர்!!
தரையில் நிகழ்த்தப்பட உள்ள உலகின் அதிவேக சாதனைக்கான வாகனத்தின் வடிவமைப்பு குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் எஞ்சினியர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். தரையின் அதிவேக சாதனை நிகழ்வுக்காக ராக்கெட் வடிவில் புதிய காரை பிளட்ஹவுண்ட் குழுவினர் வடிவமைத்து வருகின்றனர்.
இந்த குழுவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளம் பெண் பொறியாளரான பெவர்லி சிங்கும்(29) இணைய உள்ளார். இன்னும் சில வாரங்களில் தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் இங்கிலாந்து செல்கிறார். அங்கு பிளட்ஹவுண்ட் கார் வடிவமைப்பு குழுவில் இணைந்து செயல்பட உள்ளார்.
பொறியாளர் பட்டாளம்
இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரில் உலகின் அதிவேக காரை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. போயிங் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களை சேர்ந்த 30 பொறியாளர்கள் இணைந்து இந்த காரை வடிவமைத்து வருகின்றனர்.
ரோல்ஸ்ராய்ஸ் உதவி
தரையில் நிகழ்த்தப்பட இருக்கும் உலகின் அதிவேக சாதனைக்கான திட்டத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பான்சர் வழங்க உள்ளது. அதிவேக சாதனைக்கான உருவாக்கப்பட்டிருக்கும் ராக்கெட் போன்ற காருக்கான எஞ்சின், தொழில்நுட்பம் மற்றும் இந்த சாதனைக்கான நிதி உதவிகளை ரோல்ஸ்ராய்ஸ் வழங்குகிறது.
எஞ்சின்
உலகின் அதிவேக சாதனைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் ஈரோஃபைட்டர் தைபூன் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரோல்ஸ் ராய்ஸின் இஜே200 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. அதிசக்தி வாய்ந்த இந்த எஞ்சின் மூலம் தங்களது உலக சாதனை கனவு பலிக்கும் என பிளட்ஹவுண்ட் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பெருமிதம்
"உலகின் ஜாம்பவான் பொறியாளர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இது போன்று சவாலான பணிகள் செய்ய வேண்டும் என்பதை எப்போதுமே விரும்புகிறேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் என்று பெவர்லி சிங் கூறியிருக்கிறார்.
முந்தைய சாதனை
மணிக்கு 1228 கிமீ வேகத்தில் தரையில் கார் செலுத்தப்பட்ட நிகழ்வே தற்போது உலக சாதனையாக இருக்கிறது.
புதிய சாதனைக்காக...
2015ம் ஆண்டு இந்த வாகனம் தென் ஆப்ரிக்காவில் வைத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளன. 2016ம் ஆண்டில் மணிக்கு 1609 கிமீ வேகத்தில் இந்த காரை செலுத்தி புதிய உலக சாதனை படைக்க பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.