Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏற்றுமதியில் புதிய மைல்கல்: சென்னை நிசான் ஆலை தகவல்கள்
சென்னை, ஒரகடத்தில் உள்ள நிசான் ஆலையிலிருந்து இதுவரை 3 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மைல்கல்லை கடந்ததற்காக நேற்று நடந்த நிகழ்ச்சியில் நிசான் இந்தியா தலைவர் கெனிசிரோ யமுரா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கெனிசிரோ யமுரா கூறுகையில்," எங்களது பணியாளர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அர்பணிப்பு, உழைப்பால் இந்த புதிய மைல்கல்லை மிக குறுகிய காலத்தில் எட்டியிருக்கிறோம். ஏற்றுமதியை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பை நல்கி வரும் எண்ணூர் துறைமுக அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறினார்.
சென்னை ஆலை
கடந்த 2008ம் ஆண்டு ரூ.4,500 கோடி முதலீட்டை 7 ஆண்டுகளில் செய்யும் திட்டத்துடன் சென்னை அருகே ஒரகடத்தில் நிசான் காரை ஆலை அமைகக்கும் பணிகள் துவங்கப்பட்டன. 2010ம் ஆண்டு மார்ச் 17ந் தேதி சர்வதேச தரத்திலான இந்த புதிய கார் ஆலை திறக்கப்பட்டது.
உற்பத்தி திறன்
ரெனோ மற்றும் நிசான் சேர்ந்து அமைந்திருக்கும் இந்த புதிய கூட்டணி ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 2016ல் இந்த ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8 லட்சமாக உயர்த்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய உற்பத்தி பிரிவும் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி
மைக்ரா மற்றும் சன்னி கார்களை நிசான் நிறுவனம் ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகளுக்கு சென்னை ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்கிறது.
எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் துறைமுகத்தை முதன்முறையாக கார் ஏற்றுமதி முனையமாக பயன்படுத்திய பெருமை நிசான் நிறுவனத்துக்கு உண்டு. மேலும், கார் ஏற்றுமதிக்காக எண்ணூர் துறைமுகத்துடன் 10 ஆண்டுகளுக்கு நிசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டட்சன் கார்
முதல் முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்பட உள்ள புதிய டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் ஒரகடம் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. எனவே, ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், ரெனோ - நிசான் கூட்டணியின் சென்னை ஆலை ரெனோ, நிசான் மற்றும் டட்சன் என மூன்று பிராண்டு கார்களை தயாரிக்கும் ஆலையாக உருவெடுத்துள்ளது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!