Just In
- 34 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்த ஆண்டு புதிய எலக்ட்ரிக் பஸ்களை களமிறக்கும் அசோக் லேலண்ட்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் ஆப்டேர் எலக்ட்ரிக் பஸ்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் பஸ்களை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் 75 பங்குகளை அசோக் லேலண்ட் நிறுவனம் வைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டிலேயே ஆப்டேர் பஸ்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக அசோக் லேலண்ட் தெரிவித்திருந்தது. அதுகுறித்து செய்தியும் வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டு எம்பி.,யும் அந்நாட்டு வர்த்தகம், புதுமை மற்றும் திறன்கள் துறை செயலாளருமான வின்ஸ் கேபிள் நேற்று சென்னையிலுள்ள அசோக் லேலண்ட் தலைமையகத்துக்கு வருகை தந்தார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் தாசரி, இந்தியாவில் ஆப்டேர் பஸ் தயாரிப்பை துவங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இரண்டு மாடல்கள்
இந்தியாவில் ஆப்டேர் நிறுவனத்தின் சோலோ மற்றும் வெர்சா ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
தமிழக ஆலையில் தயாரிப்பு?
தமிழகம் அல்லது ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரிலுள்ள ஆலையில் இந்த புதிய பஸ்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
முதலீடு
இந்த புதிய பஸ் தயாரிப்புக்காக இதுவரை ரூ.246 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான முதலீடு தேவைப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஸ்களுக்கு தேவையான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிகளை சீனா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிராண்டு
ஆப்டேர் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் பஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் இந்தியாவில் அசோக் லேலண்ட் பிராண்டிலேயே விற்பனைக்கு வரும்.
அறிமுகம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் பஸ் கண்காட்சியில் சோலோ மற்றும் வெர்சா எலக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!