2016ல் இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம்!

By Saravana

வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா- 1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

2011ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் தொடரந்து மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடந்தன. ஆனால், அதிக வரிவிதிப்பு மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகள் ஒத்துவராததால், இந்தியாவில் ஃபார்முலா- 1 போட்டிகளை இனி நடத்த இயலாது என சர்வதேச ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனம் அறிவித்தது.

Formula 1 Race

இதையடுத்து, இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில், இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 போட்டிகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், இந்திய ஃபார்முலா- 1 அமைப்பை சேர்ந்தவர்களும் துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த ஃபார்முலா - 1 போட்டிகளின்போது, ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனத்தின் தலைவர் பெர்னி எக்லிஸ்டோனை, ஜேபி ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் மற்றும் இந்திய ஃபார்முலா - 1 பந்தய அமைப்பாளர்கள் சமீர் கவுர் தலைமையில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம் வருவது உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், வரும் 2016ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, முக்கிய ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் இடங்களை தவிர, புதிதாக சேர்க்கப்படும் நாடுகளில் சுழற்சி முறையில் ஃபார்முலா - 1 போட்டிகளை நடத்துவதற்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The sad news is that Indian fans of Formula One will have to wait for the 2016 season. The 2015 calendar has already been set and changes cannot be made to it. India successfully hosted three Grand Prix, however, in 2016 it will be the first time that the new machines will be in India.
Story first published: Friday, November 21, 2014, 9:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X