Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குஜராத்தில் பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் பஸ்கள்: முன்னோடி திட்டம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக குஜராத் மாநில பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குஜராத் மின்சார வாரியத்தின் அங்கமாக செயல்படும் குஜராஜ் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பஸ்களை சோதனை முறையில் அறிமுகம் செய்கிறது. அகமதாபாத் மற்றும் காந்திநகருக்கு இடையிலான இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக 15 முதல் 20 எலக்ட்ரிக் பஸ்களை 35 கிமீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் 15 முதல் 40 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும்.
இதற்காக அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையிலான சாலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இது குறிப்பிடப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் எலக்ட்ரிக் பஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குஜராஜ் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தனியாருடன் இணைந்து விரிவுப்படுத்தவும் குஜராத் பவர் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.
இந்த பஸ்கள் சூரிய மின்சக்தி சார்ஜ் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை பெறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். தவிர, டீசல் நுகர்வும் வெகுவாக குறையும்.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?