Just In
- 26 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 31 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வரி ஏய்ப்புடன் ஓடிய 1,000 சொகுசு கார்கள் பறிமுதல்: கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி
பெங்களூரில், வரி ஏய்ப்பு செய்து ஓட்டப்பட்ட 1,000 சொகுசு கார்களை கர்நாடக மாநில போக்குவரத்து துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியர் எஸ்டேட் துறையால் செல்வ செழிப்பில் திளைத்து நிற்கும் பெங்களூர் மாநகரில் சொகுசு கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
ஆனால், சொகுசு கார்களுக்கான வரி அதிகம் என்பதால், பெங்களூரில் கார் வாங்குவதை தவிர்க்கின்றனர். மேலும், பலர் பாண்டிச்சேரியிலிருந்து புதிய சொகுசு கார்களை வாங்கி வந்து ஓட்டுகின்றனர். இதனால், கர்நாடக போக்குவரத்து துறைக்கு வரி வருவாயில் அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிற மாநில பதிவு எண்ணுடன் பெங்களூரில் ஓடிய 3,636 கார்களை மடக்கிப் பிடித்து கர்நாடக மாநில போக்குவரத்து துறை சோதனை நடத்தியது. அதில், 1,000 கார்களுக்கு மேல் வரி ஏய்ப்பு செய்து ஓட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வரி ஏய்ப்பு செய்த கார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.14 கோடியை கர்நாடக மாநில போக்குவரத்து துறை அபராதமாக வசூலித்துள்ளது. மேலும், ரூ.3 கோடி வரை அபராதமாக வசூலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநில பதிவு எண் கொண்ட கார்கள் மட்டுமின்றி, கர்நாடகாவை சேர்ந்த பிற மாவட்டங்களிலிருந்து விதிமீறல்களுடன் ஓட்டப்பட்ட கார்களையும் பெங்களூரில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில போக்குவரத்து துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடகாவில் பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை 30 நாட்கள் வரை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பிடிபட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் மாதக்கணக்கிலும், சில கார்கள் ஆண்டுக்கணக்கிலும் ஓடியது விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!