Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோவை ராலி கார் பந்தயத்திலும் டீம் மஹிந்திரா அணியினர் முதலிடம்!
இந்திய ராலி கார் சாம்பியன்ஷிப் பந்தயம் 6 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்று கோவையில் நடந்தது. 'ராலி ஆஃப் கோயம்புத்தூர்' என்ற பெயரில் நடந்த இந்த இரண்டாவது சுற்றில் டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணி முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் எக்ஸ்யூவி500 எஸ்யூவியை மஹிந்திரா அணியினர் பயன்படுத்தினர். கரடு முரடான சாலைகளில் கூட மிகச்சிறப்பான கட்டுறுதியுடன் அதிக பெர்ஃபார்மென்ஸை வழங்கிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவியால் மஹிந்திரா தொடர்ந்து இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
ராலி ஆஃப் கோயம்புத்தூர் பந்தயத்தில் டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் வீரர் கவுரவ் கில் மற்றும் கோ டிரைவர் முசா ஷெரீஃப் ஆகிய இணை முதல் இடத்தை பிடித்தது. இதேபோன்று, டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் மற்றொரு வீரர் சன்னி சித்து மற்றும் கோ டிரைவர் பிவிஎஸ் மூர்த்தி அடங்கிய குழு மூன்றாவது இடத்தை பிடித்தது. இரண்டு ஜோடிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளையே பயன்படுத்தினர்.
கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடந்த இந்த போட்டியில் இரண்டு நிமிட இடைவெளியில் போட்டியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு கருவிகளும் போட்டியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தன.
மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்திய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள 4 சற்றுகள் சென்னை, பெங்களூர், கோல்கட்டா மற்றும் சிக்மகளூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.