Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிள்ளையார் சுழி போட்ட மஹிந்திரா... இரண்டு விலை உயர்வுகளை சந்திக்க தயாராகும் கார் மார்க்கெட்!
அடுத்தடுத்து இரண்டு விலை உயர்வுகளை கார் மார்க்கெட் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்ய முடியாத நிலையில், உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி, விலை உயர்வை கையிலெடுக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதில், முதலாவதாக, மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தக மற்றும் தனிநபர் பயணிகள் வாகன மாடல்களின் விலையையும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், மாடலுக்கு தகுந்தவாறு ரூ.2,300 முதல் ரூ.11,500 வரை மஹிந்திரா கார் மாடல்கள் விலை உயர இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, மாருதி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வை விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. வழக்கம்போல் ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்தால், பிற நிறுவனங்களும் பின்தொடரும். எனவே, பெரும்பாலான கார் நிறுவனங்கள் விரைவில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
இதுதவிர, கார்கள் மீதான உற்பத்தி வரிச்சலுகைக்கான காலக்கெடு வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. ஒருவேளை, வரிச்சலுகை நீடிக்கப்படாவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில், அதாவது புத்தாண்டிலும் விலை உயர்வை கார் நிறுவனங்கள் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு விலை உயர்வுகளை அடுத்தடுத்து கார் மார்க்கெட் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.