Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மும்பையில் இரண்டாவது கார் வாங்குவோர்க்கு கூடுதல் வரி: அரசு திட்டம்
மும்பையில், வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, இரண்டாவது கார் வாங்குவோர்க்கு கூடுதல் வரி விதிக்க மஹாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் வாகனப் பெருக்கத்தின் வேகம் கட்டுக்கடாங்காமல் செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனப் பெருக்கம் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய நேரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசலால் மும்பை ஸ்தம்பித்து விடுகிறது. நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டுள்ள அம்மாநில போக்குவரத்து துறை, வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அச்சம்
மும்பையில், கடந்த 7 ஆண்டுகளில் சராசரியாக வாகனப் பெருக்கம் 7 சதவீதமாக இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் பெரும் போக்குவரத்து பிரச்னைகளை மும்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ரெண்டு கார்
மும்பையில், 15 சதவீதத்தினர் வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு இதுபோன்று இரண்டு கார்களுக்கும் மேல் வைத்திருப்பவர்களால்தான் அதிக பிரச்னை ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
கூடுதல் வரி
இரண்டாவது காருக்கு 100 முதல் 200 சதவீதம் வரை காரின் வகைக்கும், ரகத்துக்கும் தகுந்தாற்போல் கூடுதல் வரி விதிக்க மஹாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அங்கு கார்களுக்கு 13 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை உடனடியாக 39 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
யோசிப்பார்களா?
உதாரணமாக, பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஒருவேளை, புதிய வரிவிதிப்பு முறை அமலுக்கு வரும்போது, இரண்டாவது காருக்கு ரூ.21 லட்சம் வரை செலுத்த வேண்டி வரும். இதன்மூலம், இரண்டாவது கார் வாங்குவதிலிருந்து வாடிக்கையாளர்கள் பின்வாங்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த பூச்சாண்டிகளுக்கு மும்பைவாசிகள் அசங்குவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
மற்றொரு வரி
பார்க்கிங் கட்டணங்களை அதிகரிக்கவும், டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீது சிறப்பு வரி விதிக்கும் திட்டமும் மஹாராஷ்டிர அரசிடம் உள்ளது. இதன்மூலம், புதிய கார்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறை மற்றும் திட்டங்கள் குறித்த விரைவில் முதலமைச்சரின் அனுமதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!