Just In
- 57 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்த என்சிஏபி வலியுறுத்தல்!
கிராஷ் டெஸ்ட் சோதனையில் பூஜ்யம் பெற்ற டட்சன் கோ காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துமாறு நிசான் நிறுவனத்தை என்சிஏபி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்களை கார் தர மதிப்பீட்டு அமைப்பான என்சிஏபி சமீபத்தில் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இதில், இந்த இரு கார்களும் பூஜ்யம் பெற்றன.
மேலும், டட்சன் கோ காரின் பாதுகாப்பு அம்சங்கள் மிக மோசமாக இருப்பதாகவும், குறிப்பாக வலியமையற்ற பாடி கட்டமைப்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது. டட்சன் கோ காரில் ஏர்பேக் பொருத்தினாலும், அது பாதுகாப்பை வழங்காது என்றும் என்சிஏபி தெரிவித்தது.
இது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்துமாறு என்சிஏபி அமைப்பின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, நிசான் தலைவர் மற்றும் சிஇஓ., கார்லஸ் கோஸ்னுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டட்சன் கோ காரின் பாடி கட்டமைப்பு மிகவும் வலியமையற்றதாக இருப்பதால், விபத்து ஏற்படும்பட்சத்தில் பயணிகள் உயிர் பிழைப்பது கடினம். ஏர்பேக் பொருத்தினாலும் பயன் தராது. எனவே, டட்சன் கோ கார் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி, அதன் பாடியை மறுவடிவமைப்பு செய்வது அவசியம்," என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேக்ஸ் மோஸ்லி கூறுகையில்," ஐ.நா வகுத்துள்ள குறைந்தபட்ச தர நிர்ணய அளவுகளைகூட டட்சன் கோ கார் எட்டவில்லை. இந்த காரை விற்பனைக்கு நிசான் அங்கீகரித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்திவிட்டு, பாடியை மறுவடிவமைப்பு செய்வது அவசியம்," என்று கூறினார்.
என்சிஏபி அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறுகையில்," வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் தர நிர்ணய விதிகளுக்குட்பட்டு, இந்திய கார்களை சோதனை செய்தால், குறைந்தபட்ச தர மதிப்பீடு கூட பெறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பாவில் தயாராகும் ஒரு கார் கூட பூஜ்யம் மதிப்பெண்ணை பெற்றதில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்துமாறு நிசான் நிறுவனத்தை என்சிஏபி அமைப்பு வலியுறுத்தியிருப்பது டட்சன் கோ கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதோடு, தங்களது முடிவை மறுபரிசீலித்து வருகின்றனர். இந்த செய்தி டட்சன் கோ கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!