Just In
- 11 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 50 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆர்டிஓ., அலுவலகங்களுக்கு மூடுவிழா: மத்திய அரசு அதிரடி முடிவு
"லஞ்சம் தலைவிரித்தாடும் ஆர்டிஓ., அலுவலங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தப்படும்," என்று மத்திய அமைச்சர் நிகின் கட்காரி ஆவேசமாக பேசினார்.
புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.
விழாவில் நிதின் கட்காரி பேசுகையில் கூறியதாவது,"
லட்ச, லாவண்யத்தில் உழன்று வரும் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் மூடப்படும். பழைய சட்டங்களை சட்டை செய்யாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம்.
வட்டார போக்குவரத்து அலுவலங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச, லாவண்யத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த சில மாதங்களில் ஆர்டிஓ., அலுவலகங்களுக்கு மாற்றாக செம்மையான நிர்வாகத்தை தரும் வகையில் முற்றிலும் புதிய போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ளது போன்று போக்குவரத்து விதிமீறுவோரின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமீறலுக்காக நோட்டீஸ் அனுப்பப்படும் நபர் நீதிமன்றத்தை அணுக முடியும். அதேவேளை, நீதிமன்றத்தில் விதிமீறியது உறுதி செய்யப்பட்டால் மூன்று மடங்கு அபராதத் தொகையை செலுத்த நேரிடும் என்று அவர் கூறினார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்துக்கு தக்கவாறு கடும் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தினால் மட்டுமே போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்கள் குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற ஆவலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?