Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாதசாரிகளை அடையாளம் கண்டு பிரேக் பிடிக்கும் ஃபோர்டு தொழில்நுட்பம்!
சாலையின் குறுக்கே வரும் பாதசாரிகளை அடையாளம் கண்டு தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பத்தை ஃபோர்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வால்வோ, தெஸ்லா நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமும் தனது புதிய கார் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன்மூலம், விபத்துக்கள் குறைய வழிவகை ஏற்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேடார்
காரின் வைன்ட்ஷீல்டில் கேமராவும், பம்பரில் ரேடார் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. சாலையின் குறுக்கே பாதசாரிகள் வருவதை கண்டுணர்ந்து உடனடியாக ஓட்டுனரை எச்சரிக்கும்.
தானியங்கி பிரேக்
எச்சரிக்கை உணர்ந்து டிரைவர் செயல்படாவிட்டால், உடனடியாக தானியங்கி முறையில் பிரேக்கை பிடித்து கார் நிறுத்தப்படும்.
விபத்து குறையும்
இந்த புதிய தொழில்நுட்பம் நகர்ப்புற போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக சோதனை
பல்வேறு வித சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப நிலை கொண்ட சாலைகளில் வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட காரை 3 லட்சம் மைல்கள் சோதனை செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கார் மாடல்
முதல்முறையாக 2015 மாடல் ஃபோர்டு மான்டியோ செடான் காரில் இந்த புதிய தொழில்நுட்பம் ஆப்ஷனல் வசதியாக கொடுக்கப்பட உள்ளது.