Just In
- 26 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் உற்பத்தி: ஃபியட் க்றைஸ்லர் அறிவிப்பு!
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் கார் நிறுவனம் தற்போது ஃபியட் க்றைஸலர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஜீப் பிராண்டிலான சொகுசு எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் எத்தனித்து வருகிறது.
ஆனால், கார் மார்க்கெட்டின் தட்பவெப்பம் சரியில்லை என தள்ளிப் போட்டு வருகிறது. இந்த நிலையில், ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை ஃபியட் க்றைஸ்லர் அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு சொகுசு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்ய இருப்பதாக அந்த குழுமம் உறுதி செய்துள்ளது.
அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி
முதலில் இறக்குமதி செய்து ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைக்கு விடப்பட உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி
2017ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு எஸ்யூவிகளின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதன்மூலம், மிக சரியான விலையில் தனது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்பதோடு, சந்தைப் போட்டியையும் எளிதாக தகர்க்க முடியும் என ஃபியட் க்றைஸ்லர் நம்புகிறது.
டாடாவுடன் ஒப்பந்தம்
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்வதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்த்தை மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை ஃபியட் க்றைஸ்லர் மேற்கொண்டுள்ளது.
முதலீடு
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்வதற்காக அமைக்கவேண்டிய உற்பத்தி பிரிவுகளுக்காக 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி செர்ஜியோ மார்சியோனியும் உறுதி செய்துள்ளார்.