பிப்ரவரி 17ல் ரிலீசாகிறது புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்!

By Saravana

வரும் 17ந் தேதி புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் பொதுமக்கள் பார்வைக்கு வருகிறது. இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள் குறித்த சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஃபோக்ஸ்வேகன் பஸாத், ஸ்கோடா ஆக்டாவியா கார்கள் வடிவமைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய சூப்பர்ப் கார் விஷன் - சி கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களையும் பெற்றிருக்கும்.

இடவசதி

இடவசதி

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட 80 மிமீ கூடுதல் வீல்பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இடவசதி மிகச்சிறப்பாக இருக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மூன்றாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 177 பிஎச்பி பவரை அளிக்கும் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 170 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

 இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் பின்னர் உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் மாடல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஆன்ரோடு விலை

சென்னை ஆன்ரோடு விலை

ஸ்கோடா ரேபிட் காரின் சென்னை ஆன்ரோடு விலை!

Most Read Articles
English summary
Czech Republic car maker Skoda to unveil the third generation Superb premium sedan globally, on 17th, February.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X