Just In
- 7 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் இந்தியாவில் கால் பதிக்க பீஜோ திட்டம்!
டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் இந்தியாவில் மீண்டும் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
மும்பையில் உள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகமான பாம்பே ஹவுசில், டாடா மோட்டார்ஸ் உயரதிகாரிகளை பீஜோ நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்து பேசியதும் இந்த கூட்டணிக்கான அச்சாரம் உருவாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும், இரு நிறுவனங்களுக்கும் இடையில் விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆலை திட்டம் தோல்வி
கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் ரூ.4,000 கோடியில் புதிய கார் ஆலை கட்டுவதற்கு இந்த நிறுவனம் அடிக்கல் நாட்டியது. ஆனால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த அந்த நிறுவனம், இந்தியாவில் புதிய ஆலை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.
புதிய திட்டம்
புதிய ஆலை கட்டுவதற்கு பெரும் முதலீடு செய்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டுவிட்ட, பீஜோ நிறுவனம் தற்போது டாடா மோட்டார்ஸ் உதவியுடன் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டிருக்கிறது. மேலும், உற்பத்தி, விற்பனை, சர்வீஸ் ஆகிய பணிகளை டாடா மோட்டார்ஸ் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.
கார் உற்பத்தி
குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் பீஜோ கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே ஆலையில்தான் டாடா நானோ கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பீஜோ கார் மாடல்கள்
பீஜோ 308 செடான், பீஜோ 2008 க்ராஸ்ஓவர், பீஜோ 208 ஹேட்ச்பேக் ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தம் புதிய கார் மாடல்களை தயாரித்து வெளியிடுவதை தவிர்க்கவும் பீஜோ முடிவு செய்துள்ளதாம்.
தொழில்நுட்ப பகிர்மானம்
இரு நிறுவனங்களும் எஞ்சின் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கின்றன. இரு நிறுவனங்களும் இந்த கூட்டணியின் மூலம் பயன் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
ஃபியட்டை தொடர்ந்து....
இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் கார்களை உற்பத்தி செய்து, அதன் டீலர்ஷிப் வழியாகவே விற்பனை செய்தது.. இதேபாணியில், தற்போது பீஜோ கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் டீலர் நெட்வொர்க்கை பயன்படுத்தி கார் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.