Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபோக்ஸ்வேகன் ஜெர்மனி கார் ஆலையில் ஊழியரை கொன்ற ரோபோ!
ஜெர்மனியிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில், பணியாளர் ஒருவர் ரோபோவின் எந்திர கைகளில் சிக்கி நசுங்கி உயிரிழந்தார்.
பிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாவ்னேட்டல் என்ற இடத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு சொந்தமான கார் உற்பத்தி ஆலை உள்ளது.
இந்த ஆலையில், கார் உதிரிபாகங்களை கையாள்வதற்காக ரோபோ ஒன்றை அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரரின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது ஊழியர் ஒருவரை ரோபோ கவ்வி பிடித்து நசுக்கியது. இதில், அந்த இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது மற்றொரு ஊழியரும் அருகில் நின்றுள்ளார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். இந்த விபத்திற்கு மனித தவறே காரணமாக இருக்கலாம். ரோபோவில் தொழில்நுட்ப தவறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ரோபோவை தொழிலாளர்கள் இல்லாத, பகுதியில்தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நவீன தலைமுறை ரோபோ இல்லை என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!