Just In
- 19 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 1 hr ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் காரை அசெம்பிள் செய்த சச்சின் டெண்டுல்கர்!!
'மேக் இன் இந்தியா' திட்டக் கொள்கையின் அடிப்படையில், சென்னை ஆலையில் புதிய முறையிலான கார் உற்பத்தியை பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்று துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை, அங்கிருந்த பொறியாளர்களுடன் இணைந்து அசெம்பிள் செய்தார். சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் துவங்கப்பட்டிருக்கும், இந்த புதிய கார் உற்பத்தி முறை பற்றிய அனைத்து விபரங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.
உள்நாட்டு உதிரிபாகங்கள்
'மேக் இன் இந்தியா' கொள்கையின்படி, தனது கார்களுக்கான 50 சதவீத உதிரிபாகங்களை இந்திய சப்ளையர்களிடமிருந்து பெற்று கார்களை உற்பத்தி செய்ய உள்ளது பிஎம்டபிள்யூ.
விலை குறையும்
இந்தியாவிலேயே அதிக உதிரிபாகங்களை பெறுவதன் மூலம் காரின் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறையும். இதன் காரணமாக பிஎம்டபிள்யூ கார்கள் சரியான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
உலகத்தரம்
இந்திய உதிரிபாகங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதாலும், உலகத் தரத்தில் இந்த கார்கள் இருக்கும். உலகத் தரத்திலான உற்பத்தி முறைகளை இந்த ஆலையில் கடைபிடிக்கின்றோம் என்று அந்த நிறுவனத்தின் உயரிதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக மாடல்கள்
இந்தியாவில் அதிக சொகுசு கார் மாடல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று பிஎம்டபிள்யூ. சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஹேட்சேப் மாடலும், 3 சீரிஸ், 3 சீரிஸ் கிராண்ட் டூரிஷ்மோ, 5 சீரிஸ், 7 சீரிஸ் போன்ற செடான் வகை மாடல்களு்ம், எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 ஆகிய எஸ்யூவி வகை மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டுகின்றன. சென்னை ஆலையின் இரு உற்பத்தி பிரிவுகளில் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சப்ளையர்கள்
பிஎம்டபிள்யூ கார்களுக்கான எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்களை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனமும், ஆக்சில்களை இசட்எஃப் ஹீரோ நிறுவனமும், டோர் பேனல்கள் ட்ரேக்ஸ்மயர் இந்தியா நிறுவனமும், எக்ஸ்சாஸ்ட் சிஸ்டத்தை டெனக்கோ ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனமும், ஏர்கண்டிஷன் மற்றும் குளிரூட்டும் சிஸ்டம்களை வாலியோ மற்றும் மஹேல் பெஹர் ஆகிய நிறுவனங்களும் சப்ளை செய்கின்றன.
சச்சின் தயாரித்த கார்
சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின்படி 50 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை கிரிக்கெட் ஜாம்பவானும், பிஎம்டபிள்யூ பிரியருமான சச்சின் டெண்டுல்கர், உற்பத்தி பிரிவை சேர்ந்த பொறியாளர்களுடன் இணைந்து அசெம்பிள் செய்தார்.
பெருமிதம்
"நான் பிஎம்டபிள்யூ கார் பிரியர். நீண்ட காலமாக பிஎம்டபிள்யூ கார்களை பயன்படுத்தி வருகிறேன். ஆனால், என் கைகளால் ஒரு பிஎம்டபிள்யூ காரை உருவாக்கினேன் என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், என் வாழ்வில் மறக்க முடியா தருணமாகவும் உணர்கிறேன். இங்கு பின்பற்றப்படும் தர கட்டுப்பாடுகளும் என்னை கவர்ந்தது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
உதிரிபாகங்கள்
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் 2,800 உதிரிபாகங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதம் அளவுக்கு இந்தியாவிலேயே பெறப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூவும் சச்சினும்...
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!