Just In
- 2 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
500,1000 நோட்டுகளுக்கு தடை எதிரொலி: கார்களுக்கு 100 சதவீத கடன் வசதி திட்டம்!
500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கார் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மந்த நிலையை தவிர்த்துக் கொள்வதற்காக சிறப்பு திட்டங்களை கார் நிறுவனங்களும், இருசக
கடந்த 8ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், செல்லாது அறிவிப்பு கார் மார்க்கெட்டிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. நம் நாட்டில் 80 சதவீத கார்கள் கடனில் வாங்கப்பட்டாலும், விலை உயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ரொக்கம் கொடுத்தே வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில், செல்லாது அறிவிப்பு காரணமாக புதிய கார்களுக்கான முன்பதிவு வெகுவாக குறைந்துவிட்டது. நாடு முழுவதும் கார் விற்பனை 25 சதவீதம் வரை குறையும் என்று சந்தை நிபுணர்கள் கணித்து கூறியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் டெல்லியில் கார்களுக்கான முன்பதிவு 70 சதவீதம் குறைந்துவிட்டதாம்.
மேலும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும் ரத்து செய்ய துவங்கியிருக்கின்றனர். உதாரணத்திற்கு புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் தங்களது முன்பதிவை ரத்து செய்து வருகின்றனராம்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பின்னர் புதிய கார்களுக்கான முன்பதிவு வெகுவாக குறைந்துவிட்டதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், செல்லாது அறிவிப்பால் அதிக பாதிப்பு இல்லை என்று நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி தெரிவித்துள்ளது.
தங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் கடனில் வாங்குவதால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செல்லாது அறிவிப்பால் ஏற்பட்டிருக்கும் மந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன.
இதற்காக, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளுடன் ஹோண்டா கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹூண்டாய் கார் நிறுவனமும் இந்த 100 சதவீத கார் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எச்டிஎஃப்சி, கோடக், ஆக்சிஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஆண்டு கடைசியில் எப்போதுமே கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால், கூடுதல் சிறப்புச் சலுகைகளும் வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதே பாணியை கையாள பிற கார் நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதம் குறைந்துவிட்டது. மேலும், ரொக்கமாக செலுத்த இயலாத வாடிக்கையாளர்களுக்காக வங்கி அட்டைகள் மூலமாக பணம் செலுத்துவதற்கான வசதிகளையும் கட்டணமில்லாமல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..