Just In
- 17 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னை ஹூண்டாய் ஆலையில் 7 மில்லியன் கார்கள் உற்பத்தி!
சென்னையிலுள்ள ஹூண்டாய் கார் ஆலை உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. அதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதோடு, பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஹூண்டாய் கார் ஆலை மகத்தான புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஆம், அந்த ஆலையில் இதுவரை 70 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
70 லட்சமாவது காராக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் உற்பத்தி பிரிவிலிருந்து நேற்று வெளிவந்தது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ மற்றும் உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் கணேஷ் மணி ஆகியோர் இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி சரியாக 18 ஆண்டுகளில் இந்த சாதனையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற அளவுடன் தொடர்ந்து பல புதிய மைல்கல்களை இந்த ஆலை கடந்து வருகிறது.
அதாவது, ஹூண்டாய் நிறுவனத்துக்கு உலக அளவில் உள்ள கார் ஆலைகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கார்களை உற்பத்தி செய்யும் கார் ஆலையாக சென்னை ஹூண்டாய் ஆலை பெருமை பெற்றிருக்கிறது.
1998ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட சென்னை ஹூண்டாய் ஆலையில் 2006ம் ஆண்டு ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை தாண்டியது. அப்போது சான்ட்ரோ கார் ஒரு மில்லியனாவது கார் என்ற பெருமையுடன் உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்தது.
2013ம் ஆண்டில் 5 மில்லியனாவது கார் பாலிவுட் நடிகரும், ஹூண்டாய் விளம்பர தூதருமான ஷாரூக்கான் முன்னிலையில் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது. தற்போது ஹூண்டாய் க்ரெட்டா 7 மில்லியனாவது காராக உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனம் என்ற பெருமையையும் ஹூண்டாய் தக்க வைத்து வந்தது. மொத்தம் 24,64,723 கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
"வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளதாக ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ தெரிவித்தார். ஹூண்டாய் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவும், ஒத்துழைப்பையும் நல்கி வரும் தமிழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பில் ஹூண்டாய் கார் ஆலை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அத்துடன், சமூக நல திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு