Just In
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதும் விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் விதமாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நாடுமுழுவதும் தினசரி சராசரியாக 1,400 விபத்துக்கள் நடப்பதாகவும், 400 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான சந்திரசூட் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த மனுவின் மீதான விசாரணை முடிவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்பட வேண்டும்.
மதுக்கடைகள் இருப்பதை தெரிவிக்கும் வகையிலான விளம்பர தட்டிகள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் நெடுஞ்சாலைகளில் வைக்கவும் கூடாது, கண்ணில் தென்படக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2,000 மதுக்கடைகள் வரை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!