Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பாதுகாப்பு அம்சங்களை அலட்சியப்படுத்தும் மாருதி வாடிக்கையாளர்கள்!
நமது அறிவார்ந்த மக்களிடம் கூடவே பிறந்த குணம் ஒன்று உள்ளது... எந்தத் தவறாக இருந்தாலும் சரி... அதற்கு அடுத்தவர் மேல் பழி சொல்வது.. அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இல்லாததற்கும், பொது இடங்களில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கும் காரணம் ஆட்சியில் இருப்பவர்கள்தான் என்று குற்றம்சாட்டியே பழகிவிட்டோம்.
சாலை விபத்துகள் அதிகமாக நேர்வதற்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கும் அரசுதான் காரணம் என்றும் பலர் பழி சுமத்துகின்றனர். ஆட்சியாளர்களின் கடமை தவறிய செயல்கள் ஒரு புறம் இருக்கட்டும்... நம்மில் எத்தனை பேர் சட்டத்தை மதிக்கும் குடிமகன்களாக இருக்கிறோம்? தலைக்கவசம் அணிகிறோமா? சிக்னலை மதிக்கிறோமா? சாலையில் இருக்கும் எச்சரிக்கை விதிகளை கடைப்பிடிக்கிறோமா? இதெல்லாம் இல்லை. ஆனால் பிறரைத் தூற்றுவதில் மட்டும் அலாதிப் பிரியம் கொண்டிருக்கிறோம்.
நம் மக்கள் வாகனங்களில் செல்லும்போது, எந்த அளவுக்கு தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது குறித்து வெளியான சமீபத்திய ரிப்போர்ட் ஒன்று அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
அதாவது மாருதி நிறுவனம் தயாரித்துள்ள கார்களில் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள ஏர் பேக்-களை வாங்குவதற்கு எத்தனை வாடிக்கையாைளர்கள் முன்னுரிமை தருகிறார்கள் என்பது குறித்த சர்வேதான் அது.
பலேனோ, விட்டாரா பிரேஸா, எஸ் கிராஸ் உள்ளிட்ட மாடல்களில் இலவச இணைப்பாகவே இந்த ஏர் பேக்-கள் வருகின்றன. அதைத் தவிர பிற மாடல்களில் வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.
மொத்தமாகவே 37 சதவீத மாருதி வாடிக்கையாளர்கள் மட்டுமே ஏர் பேக் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளனராம். இத்தனைக்கும் ஓட்டுர் இருக்கையில் பொருத்தப்படும் ஏர் பேக்கின் விலை வெறும் ரூ.6000 தான். மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையில் 17 சதவீதத்துக்கும் மேல் இருப்பது ஆல்ட்டோ மாடல்கள்தான்.
அந்த மாடலைத் தேர்வு செய்யும் 95 சதவீத வாடிக்கையாளர்கள் ஏர் பேக்-களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறுகிறது அந்தப் புள்ளிவிவரம். வெளிப்புறத் தோற்றத்துக்கும், ஆடியோ சிஸ்டத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அளிக்கும் நமது முற்போக்கு சமூகம், சுய பாதுகாப்புக்காக எதையும் செய்வதில்லை. ஏன், இன்ஷுரன்ஸ் கூட புதுப்பிப்பதில்லை.
மக்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு அதிகரித்தால் மட்டுமே சாலை விபத்துகள் குறையும்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!