Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பதற்ற பூமியை பந்தயக் களமாக்கிய மாருதி... ஜம்முவில் களை கட்டிய முகல் ரேலி....
இந்தியர்களின் மனங்களில் நம்பிக்கைக்குரிய கார் நிறுவனமாக திகழ்வது மாருதிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருபுறம் விற்பனை, புதிய மாடல்கள் அறிமுகம், சமூகப் பங்களிப்பு எனப் பல்வேறு ஏரியாக்களில் அந்நிறுவனம் பட்டையைக் கிளப்புகிறது. அதேநேரத்தில் மோட்டார் ஸ்போர்ட்களை நிகழ்த்துவதிலும் மாருதிக்கு நிகர் மாருதிதான். அதன் எஃப்எம்எஸ்சிஐ தேசிய லீக் கார் ரேலி மிகவும் பிரசித்தம். டிடிஎஸ் எனப்படும் டைம், டிஸ்டன்ஸ் மற்றும் ஸ்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் கார் பந்தயம் அது.
அதாவது, குறிப்பிட்ட தூரமுடைய இலக்கை, குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைவதுதான் இந்த ரேலியின் ஹைலைட். ஆண்டுதோறும் இந்த பந்தயத்தை நடத்தி பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மாருதி.
உத்தரகண்ட், புணே மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் முதல் மூன்று சீசன் பந்தயங்கள் நடைபெற்றன. அதன் நாலாவது சீசன் கடந்த 19-ஆம் தேதியன்று ஜம்முவில் தொடங்கியது.
பல சுற்றுகளாக நடந்து வந்த இந்த ரேலி இன்றுடன் (ஆக.22) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் விஷேசம் என்னவென்றால், இந்த முறை பந்தயத்தில் பங்கேற்ற கார்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அனைவரும் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும், கூடுதல் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் இல்லை. இதன் காரணமாக, கடந்த மூன்று சீசன்களைக் காட்டிலும் இந்த முறை அதிகப் போட்டியாளர்கள் பங்கேற்றதாக பந்தய ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஜம்முவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே இந்த ரேலி நடைபெற்றது. மொத்தம் 15 அணிகள், 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என பந்தயக் களமே களை கட்டியது. பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்குப் பிறகு காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவுகளும் பல இடங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த அசாதாரண சூழலிலும் ரேலியை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு மாருதி நிறுவனத்தை வாழ்த்தியே ஆக வேண்டும். பந்தயத்தின் முடிவுகள், அடுத்தகட்ட போட்டி ஆகியவற்றைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!