Just In
- 18 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 36 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கேமரா கண்களில் சிக்கிய டாடா ஸ்ட்ரோம் புதிய டீசல் எஞ்சின் மாடல் கார்...
தில்லியில் 2.0 லிட்டருக்கு கூடுதலாக திறன் கொண்ட டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையால் பெரும்பாலான கார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சில, பெட்ரோல் வகை வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டன. மேலும் சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் கார்களைத் தயாரிக்க முனைப்பு காட்டின.
ஆனாலும் கூட, டீசல் வாகனங்களின் விற்பனையை ஈடுகட்டுவதற்கு அந்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. இதனால், தில்லி அரசு மீது உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த கார் நிறுவனங்கள் கூட அதிருப்தியில் இருந்தன.
இந்த நிலையில், டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு மாற்றாக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, சோர்ந்து போயிருந்த கார் நிறுவனங்களுக்கு எனர்ஜி டிரிங்க் கொடுத்தைப் போல புத்துணர்ச்சியைத் தந்தது. உடனடியாக செயலில் இறங்கி மீண்டும் டீசல் எஞ்சின் கார்களின் விற்பனையைத் தொடங்கி விட்டன.
ஆனாலும் கூட அந்நிறுவனங்களுக்கு உள்ளூர ஒரு விதமான பய உணர்வு இருந்து கொண்டேதான் உள்ளது. எங்கு மீண்டும் தில்லி அரசு ஏதாவது வகையில் 2.0 லிட்டர் திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு தடை விதித்து விடுமோ என்பதுதான் அந்த பயம்.
அதைக் கருத்தில் கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது எஸ்யூவி மாடலான ஸ்டோர்ம் காரை 1.99 செயல்திறன் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தி அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏற்கெனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஸ்கார்பியோ ஆகியவற்றில் அதே வகையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது டாடா நிறுவனமும் அந்த வரிசையில் களமிறங்கியுள்ளது. புதிய டீசல் எஞ்சின் மாடலான டாடா ஸ்ட்ரோம் காரின் சோதனை ஓட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இது கேமராவின் கண்களுக்கு வசமாக சிக்கியுள்ளது. தில்லியில் பிஸியான சாலைகளில் வரும் நாட்களில் புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட டாடா ஸ்ட்ரோம், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஸ்கார்பியோ கார்களை காணலாம்.
ஒருவேளை ஏற்கெனவே இருந்ததைப் போல அவற்றுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், எங்கள் கார்களில் 1.99 லிட்டர் திறன் எஞ்சின்கள்தான் உள்ளன என்று கூறி வசதியாகத் தப்பித்துக் கொள்ளலாம்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350