Just In
- 8 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 52 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 3 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சென்னையின் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி
சென்னையின் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்காக, பிரத்யேக கொண்டாட்ட நிகழ்ச்சிச்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகோ என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக்கை ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 100 டியாகோ ஹேட்ச்பேக்குகளை வெற்றிகரமாக விற்றுள்ளது.
இதற்காக, சென்னையில் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டது.
ஆச்சர்யமூட்டும் வகையில், சென்னையில் விற்கபட்ட முதல் 100 டாடா டியாகோவில், 86 கார்கள் பெட்ரோல் மாடலாகவும், 14 கார்கள் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்ட மாடல்களாகவும் உள்ளது. அதிலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட டாப்-என்ட் வேரியன்ட்டை தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில், பழையபடி மக்கள் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட கார்களை வாங்கும் வழக்கம் அதிகரிப்பதையே இது உணர்த்துகிறது.
இது வரை, டியாகோ ஹேட்ச்பேக் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சுமார் 1,00,000 விசாரணைகளை பெற்றுள்ளது. அவற்றில், 15,000 விசாரணைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புக்கிங்களாக மாற்றியுள்ளது. டாடா டியாகோ ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மற்றும் வருங்கால நோக்குடைய டிசைன் சித்தாந்தத்தை எடுத்து காட்டுகிறது. இது, இந்தியாவில் உள்ள இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்தது. இவர்களுக்கு, டியாகோ பிராண்டின் அம்பாஸிடராக உள்ள லியோனல் மெஸ்ஸியை நேரில் காணும் வாய்ப்பு வழங்கபட்டது. இந்த 11 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களும், கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸியை நேரில் சந்திப்பதற்காக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு அழைத்து செல்லபட்டனர்.