Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்
”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்து தான் உருவாகும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாநில ஆளுநர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கிடம் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அரங்கத்தில் இருந்த ஒருவர், ரோபோக்கள் மனித செயல்களுக்கு மாற்றாக மாறுமா? என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பினார்.
எலான் மஸ்க், இதை மிகவும் சீரியஸாகவே எடுத்துக்கொண்டர், கேள்விக்கு பதிலளித்த போதும் அதில் பல நிகழ்கால உண்மைகளுடன் விளக்கினார்.
"ரோபோவை கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே தெரியவில்லை. எந்த நாட்டு அரசும் இதை கண்டுக்கொள்வதாக இல்லை. மனிதனை விட ரோபோக்கள் எல்லா வேலைகளையும் திருத்தமாக செய்யும். அதனாலே இது மனித இனத்திற்கு ஆபத்தானது தான்"
"இதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளில் அரசு தலையீட வேண்டும். ரோபோவிற்கான கட்டமைப்புகளை ஆராய்ந்து வலிமையான கட்டுபாடுகளை விதிக்கவேண்டும். அரசு தாமதிக்கும் ஓவ்வொரு நாளும் மனித இனத்திற்கு ஆபத்து தான்" என்று எலான் மஸ்க் தெரிவித்த பதில்கள் அரங்கத்தில் எச்சரிக்கை மணிகளாக ஒலித்தன.
செயற்கை நுண்ணறிவு திறனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து எலான் மஸ்க் பேசுவது இது இரண்டாவது முறை.
2015ல் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள் பலர் கில்லர் ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கடுமையாக எதிர்த்தார்.
மேலும், அதனால் மனித குலத்திற்க்கு அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். இது அன்றைய நாளில் பெரிய பரபரப்பை கிளப்பின.
இருப்பினும் "செயற்கை நுண்ணறிவு பெற்ற தொழில்நுட்பங்களை ரசிக்கும் நாம், அது ஏற்படுத்த இருக்கும் ஆபத்துகளை உணரும் போது, நிச்சயம் அதன் மேல் பயம் கொள்ள தொடங்கி இருப்போம்." என்று எலன் மஸ்க் நிகழ்ச்சியில் நிறைவாக பேசினார்
ஆட்டோமொபைல் உலகின் வருங்காலத்தின் முன்னோடி என்று பார்க்கப்படும் எலான் மஸ்க்கின் இந்த பேச்சு, உலகளவிலான தொழில்நுட்ப துறையில் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால போக்குவரத்தை மேம்படுத்த ஹைப்பர்லூப் போக்குவரத்துத் திட்டம், SpaceX, எலெக்ட்ரிக் கார்கள் போன்ற மாற்று தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகம் செய்ததில் எலான் மஸ்க் பெரிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!