Just In
- 16 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 40 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுமதி!
தானியங்கி கார்களை சோதனை செய்ய பிரபல ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களை இனி பார்க்கலாம்.
தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய கார்களை சோதனை செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்கான அனுமதியை சமீபத்தில் பெற்ற அந்நிறுவனம் முதற்கட்ட பணிகளை கலிஃபோரினியாவில் மேற்கொள்ளவுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
கலிஃபோர்னியாவின் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி காரை ஓட்டக்கூடிய தொழில்நுட்பத்தை சந்தையாக்க ஆப்பிள் முயன்று வருகிறது. இதற்காக 2015ல் வெளியான லெஸஸ் ஆர்.எக்ஸ் மாடல் கார்கள் மற்றும் ஹைபிரிட் எஸ்.யூ.விகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சோதனையின் போது, அவசர நிலை ஏதேனும் நேர்ந்தால், வாகனத்தை ஆறு பேர் வரை கட்டுப்படுத்தால். மேலும், விரைவில் இதற்கான அனைத்து செயல்பாடுகளை குறித்தும் ஆப்பிள் தகவல் வெளியிடவுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆப்பிள் நிறுவனம் ‘பிரோஜெக்ட் டைட்டன்' என பெயரிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தன்னுடன் மற்ற 29 நிறுவனங்களை ஆப்பிள் இணைத்துக்கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களும் ஆப்பிள் ஒப்பந்தம் செய்துள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன.
தானாக இயங்கும் கார்களுக்கான திட்டப் பணிகள் முன்னரே பல நிறுவனங்களிடம் இருந்தாலும், கூகுள் இதற்கான செயல்பாடுகளில் தீவிரம் காட்டிய பிறகு தான் பல நிறுவனங்கள் தானியங்கி கார்களுக்கான பணிகளில் மும்முரம் காட்டின.
இதுபோன்று தான் ஆப்பிள் நிறுவனமும், இதில் ஆர்வமாக ஈடுபடத்தொடங்கியுள்ளது. இருந்தாலும் தானியங்கி கார் தயாரிப்பதில் இன்றும் சந்தையில் கூகுள் நிறுவனம் தான் முன்னிலையான பங்குகளை வைத்துள்ளது.
இந்த திட்டத்தில் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை தொடர்ந்து, ஊபர் கால் டாக்ஸி நிறுவனமும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது. ஆப்பிளை போலவே, ஊபர் நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!