Just In
- 56 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிவிரைவு சாலைகளில் வேக வரம்பை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டம்!
அதிவிரைவு சாலைகளில் வேக வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டிலுள்ள அதிவிரைவு சாலைகளில் அதிகபட்ச வேகத்திற்கான வரம்பை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள் அதிவிரைவு சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதி இருக்கிறது. டெல்லியிலிருந்து ஆக்ராவை இணைக்கும் அதிவிரைவு சாலையில் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு விதிகள் உள்ளன. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்வதற்கு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை உயர்த்துவதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," தற்போது நெடுஞ்சாலைகளின் தரமும், கட்டமைப்பும் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. மறுபுறத்தில் வாகனங்களின் பாதுகாப்பும், தரமும் வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகத்தை உயர்த்துவதற்கு இது சரியான தருணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். இதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது 1,000 கிமீ தூரத்திற்கு புதிய விரைவு நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி- மீரட் மற்றும் கிழக்கு விரைவுசாலைகளில் இதற்கான பணிகளும் துவங்கிவிட்டன. திட்டமிடப்பட்டிருக்கும் பிற விரைவு சாலைகளிலும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறி இருக்கிறார்.
இதனிடையே, மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கும் செயல் குறித்து சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இது சாலை பாதுகாப்பில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலேயே மணிக்கு அதிகபட்சமாக 137 கிமீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. அங்கு சாலை அமைக்கும் நுட்பம் மற்றும் தரத்திற்கான பின்பற்றப்படும் நடைமுறைகள் சிறப்பானவையாக இருக்கின்றன.
ஆனால், இந்தியாவில் மிக மோசமான சாலை கட்டமைப்புகளால்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, அதிகபட்ச வேகத்தை நிர்ணயம் செய்வது குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 44 சதவீதம் அதிவேகத்தால் ஏற்பட்டவை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் அரசு நிதானமாக யோசித்து முடிவு செய்வது அவசியம் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
விரைவு சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் அதிகபட்ச வேகத்தை உயர்த்துவது சிறந்த விஷயம்தான். ஆனால், அதற்கு தகுந்த கட்டமைப்புகளையும், பாதுகாப்பு அம்சங்களையு் நம் நாட்டு சாலைகள் பெற்றிருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!