Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
புதிய செவர்லே எசென்சியா செடான் கார் ஏற்றுமதிக்கு மட்டுமே!!
இந்தியாவில் 2017 செவர்லே பீட் மற்றும் செவர்லே பீட் எசென்சியா கார்களின் வெளியீட்டை ரத்து செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
இந்தியாவில் இந்த ஆண்டுடன் செவர்லே கார்கள் விற்பனையை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்து ஆட்டோமொபைல் உலகிற்கு அதிர்ச்சி கொடுத்தது ஜெனரல் மோட்டார்ஸ்.
இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட இருந்த 2017 செவர்லே பீட் மற்றும் புதிய பீட் எசென்சியா கார்களின் விற்பனைக்கான வெளியீட்டை ரத்து செய்துள்ளது.
இதில் கடந்தாண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போது ஜெனரல் மோட்டார்ஸ் புதிய எசென்சியா காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செவர்லே பீட் கார் இந்தியாவில் அறிமுகமான போது அதனுடைய விற்பனை உச்சத்தில் இருந்தது. தற்போது செவர்லே கார்களில் பலருக்கும் தெரிந்த மாடல் பீட் தான்.
தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்திருக்கும் செவர்லே பீட் எசென்சியா கார் செடான் மாடல் கார்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டது.
ஜெனரல் மோட்டார்ஸ் பீட் எசென்சியா காரை டாடா டிகோர் செடான் காரின் நேரடி போட்டியாக சந்தையில் களமிறக்க திட்டமிட்டு இருந்தது.
மேம்படுத்தப்பட்ட மாடலில் தயாராகியுள்ள செவர்லே 2017 பீட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களில் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டது.
செவர்லேவின் 'மை லிங்' தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதனுடைய உள்கட்டமைப்பில் கவனம் ஈர்க்கிறது.
இந்தியா சாலைகளில் ஜெனரல் மோட்டார்ஸ் சமீபகாலங்களில் செவர்லே எசென்சியா பீட் காருக்கான சோதனை ஓட்டத்தையும் கூட நடந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியால் செவர்லேவின் இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் நாம் குட்பை சொல்ல வேண்டிய நேரம் உருவாகியுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸின் அறிவிப்பு இந்தியாவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ந்து இந்தியாவை ஏற்றுமதிக்காக அந்நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.
அதன்படி, மும்பை அருகே உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையில் புதிய பீட் மற்றும் எசென்சியா கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
அங்கியிருந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதி நாடுகளுக்கு செவர்லே கார்களை ஏற்றுமதி செய்யவுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.
இன்னும் ஓரீரு மாதங்களில் இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் கார்களை வலது பக்க டிரைவிங் முறையில் தயாரிக்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக நிறுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.