Just In
- 2 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கனரக வாகன ஏற்றுமதியில் புதிய உச்சம்; ’மேன் இன் இந்தியா’ பிரச்சாரத்திற்கு முன்னோடியான டெய்மலர்..!!
இந்தியாவில் தயாரித்து 10,000 டிரக்குகளை ஏற்றுமதி செய்து டெய்ம்லர் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கனரக வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் புதிய மைல்கல்லை படைத்துள்ளதாக இந்தியாவின் டெய்ம்லர் கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட பிரபல டெய்மலர் நிறுவனம், இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை தயாரிக்க சென்னை பெருங்குடியில் 2012ல் கால்பதித்தது.
இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை (பேருந்து, லாரி, டிரக்கு) தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் வெற்றிக்கரமாக செயல்பட்டு வரும் டெய்ம்லர், தனது 10,000வது டிரக்கை சமீபத்தில் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியில் டெய்ம்லர் நிறுவனத்தின் இந்த எண்ணிக்கை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்திய தயாரிப்புகளுக்கு மத்திய அரசு முன்மொழிந்து வரும் ’மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்திற்கு இந்த சாதனை வலுசேர்ப்பதாக டெய்ம்லர் பெருமையுடன் கூறியுள்ளது.
டெய்ம்லர் இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த டிரக் இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி ஆகிறது.
40 டன் எடைக்கொண்ட அந்த டிரக்கை டெய்ம்லர், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடிஸ்-பென்ஸ் முத்திரை உடன் டெய்ம்லர் தயாரித்த மொத்தம் 250 டிரக்குகள், இந்தோனேஷியா மற்றும் இதர தெற்கு ஆசிய நாடுகளுக்கு சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பாரத்பென்ஸ் தயாரிப்புகளின் படி, நடுத்தர பயன்பாடு என்றால் 9 முதல் 16 டன் எடையில் கமர்ஷியல் வாகனங்கள் இருக்கும்.
அதுவே கனரக பயன்பாடு என்றால் 16 முதல் 49 டன் எடையில் கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கப்படும். இது பாரத்பென்ஸின் கோட்பாடு.
இதே வழிமுறைகளை பின்பற்றி தான் டெய்ம்லர் இந்தியாவில் தனது கமர்ஷியல் வாகனங்களை தயாரிக்கிறது. இந்திய ஆட்டோமொபைலுக்கு இதுவும் ஒரு கௌரவம் தான்.
இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் வாகனங்களை ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள், ஆஃப்ரிக்கா, மற்றும் லத்தின் அமெரிக்காவில் ஏற்றுமதி செய்கிறது.
டெய்ம்லர் இந்தியாவில் தயாரித்தாலும், அனைத்து வாகனங்களும் அந்தந்த நாடுகளுக்கான வாகன கொள்கையின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்படுகின்றன.
டிரக்குகளை தயாரிப்பதில் உலகின் முன்னோடியாகவும் டெய்ம்லர் இருந்து வருகிறது. டிரக்குகளை தவிர டெய்ம்லரின் சென்னை தொழிற்சாலையில் பேருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து இதுவரை டெய்ம்லர் 1000 பேருந்துகள் வரை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்காக அந்நிறுவனம் தயாரித்த பள்ளிப்பேருந்துகளும் அடக்கம்.
மிட்சுஃபிஷி நிறுவனத்தின் ’ஃபுயூசோ’ டிரக்குகளும் சென்னை டெய்ம்லர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றை சென்னையில் இருந்து கென்யா மற்றும் தென் ஆஃப்ரிக்க நாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து 10000 டிரக்குகளை ஏற்றுமதி செய்தது என்பது தொடக்கம் தான். மேலும் சந்தை வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தியாவில் நம்பகமான, திறமையான நிறுவனமாகவும் வளர டெய்ம்லர் பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஆசிய டெய்ம்லர் நிறுவனத்திற்கான தலைமை அதிகாரி மார்க் லிஸ்டோசெல்லா தெரிவித்தார்.
இந்தியாவில் தொழிற்சாலை அமைத்த பிறகு டெய்ம்லர் நிறுவனத்தின் வளர்ச்சி 2 மடங்காக உள்ளதாக டெய்ம்லர் கமர்ஷியல் வாகன பிரிவின் தலைமை அதிகாரி எரிக் நெலஷாஃப் கூறினார்.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!