Just In
- 30 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
குஜராத்தில் தொழிற்சாலையை அமைத்த ஃபோர்டு: தமிழக அரசு புதிய விளக்கம்
ஃபோர்டு நிறுவனம் தனது 2வது தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்க காரணம் என்ன? இந்த பக்கத்தில் விரிவாக பார்க்கலாம்
குஜராத்தில் ஃபோர்டு நிறுவனம் தொழிற்சாலை அமைத்துள்ளதை குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.
கடந்த 2015ம் ஆண்டில் பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் அதன் 2வது தொழிற்சாலையை சென்னையை தொடர்ந்து குஜராத்தில் அமைத்தது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக உள்ள சென்னைக்கு இப்படி ஒரு பெயர் கிடைக்க காரணமாக இருந்த நிறுவனம் ஃபோர்டு மோட்டார் கம்பெனி.
மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்கள் அளித்த கடும் போட்டியை பின்னுக்கு தள்ளி 1995ம் ஆண்டில் ஃபோர்டு நிறுவன தொழிற்சாலையை தமிழகத்திற்கு பெற்று தந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலித்தா.
1995ம் ஆண்டில் சென்னை மறைமலர் நகரில் ஃபோர்டு நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைத்த பிறகு தான், ஹூண்டாய் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, டெய்ம்லர், மிட்சுபிஷி மோட்டார்ஸ் போன்ற ஆட்டோமொபைல் துறையில் பல முன்னோடி நிறுவனங்கள் சென்னையில் தன் தொழிற்சாலைகளை அமைத்தன.
ஆட்டோமொபைல் துறையில் சென்னையை உலக கவனம் பெறச் செய்த ஃபோர்டு நிறுவனம் புதிய தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பதத்தற்கான காரணத்தை 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூறியுள்ளது தமிழக அரசு.
குஜாரத்தில் ஃபோர்டு நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க காரணமாக இருப்பது இரண்டு தான் ஒன்று செலவீனம் மற்றும் விற்பனை திறன்.
சென்னையில் ஃபோர்டு கார்கள் தயாரிக்கப்பட்டாலும், வட மாநிலங்களில் தான் இந்நிறுவனத்திற்கான விற்பனை திறன் அதிகமாகவுள்ளது.
ஃபோர்டு நிறுவன தயாரிப்புகளை அதிகளவில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அதிகளவில் உள்ளனர்.
மேலும், சென்னையிலிருந்து வட மாநிலத்தில் உள்ள ஃபோர்டு ஷோரூம்களுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதில், அந்நிறுவனத்திற்கு பல மடங்கு செலவுப்பிடிக்கிறது.
இந்த இரு காரணங்களை கருத்தில் கொண்டே ஃபோர்டு நிறுவனம் தனது இரண்டாவது தொழிற்சாலையை குஜராத்தில் அமைத்துள்ளது.
குஜராத்தில் இந்த தொழிற்சாலை அமைத்ததன் மூலம், வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் மட்டுமில்லாமல், இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் இந்நிறுவனத்தால் விற்பனையை விரிவுப்படுத்த முடியும்.
இது முழுக்க ஃபோர்டு நிறுவனத்தின் சொந்த முடிவு என்றும், இவற்றை தவிர குஜராத்தில் ஃபோர்டு தனது 2வது தொழிற்சாலையை அமைக்க வேறதுவும் காரணங்கள் இல்லை எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக அறிக்கையில் கூறியுள்ளது.
குஜராத்தின் சனந்த் பகுதியில் அமைந்திருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை சென்னை விட பல மடங்கு பெரிதாக 460 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒராண்டிற்கு இந்தியாவில் மட்டும் ஃபோர்டு நிறுவனம் 610,000 எஞ்சின்கள் மற்றும் 440,000 கார்களை தயாரிக்க முடியும்.
குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைந்திருந்தாலும், ஃபோர்டு நிறுவத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிக மையம் சென்னையில் அமையவுள்ளது.
இதற்கான கட்டமைப்பிற்காக மட்டும் ஃபோர்டு ரூ.1,300 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது.
அமெரிக்காவிற்கு பிறகு இந்தியாவில் அமைக்கப்படும் ஃபோர்டு நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் சென்னை ஷோலிங்கநல்லூரில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் தயாராகவுள்ளது.
இந்த மையத்தின் மூலம் உலகளவில் ஃபோர்டு நிறுவனத்திற்கான சந்தை மதிப்பை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல், இந்தியாவில் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும் சூழல் உள்ளது.
குஜராத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலையை ஃபோர்டு அமைத்தாலும், அதனுடைய தலைமை இடமாக சென்னையின் மறைமலர் நகரிலுள்ள அலுவலகம் தான் இருக்கும்.
மறைமலர் நகரில் இயங்கும் தொழிற்சாலையில் இதுவரை ஃபோர்டு ரூ.45,000 கோடியை முதலீடு செய்துள்ளது. அங்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் கார்கள் மற்றும் 2.50 லட்சம் கார் எஞ்சின்கள் தயாரிக்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் சென்னையை உலக கவனம் பெறச்செய்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் 5,000 பேர் பணிபுரிக்கின்றனர்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?