இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

ஃபார்முலா-1 கார் பந்தயம் மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் துளிர் விட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவில், மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக ஃபார்முலா-1 எனப்படும் உலகின் முதல் தர கார் பந்தயம் இந்தியாவில் நடந்தன. டெல்லி அருகே நொய்டாவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த பந்தயங்கள் விமரிசையாக நடந்தன.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

கார் பிரியர்களையும், மோட்டார் பந்தய பிரியர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த பந்தயம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயத்திற்கு விதிக்கப்பட்ட வரிகள் மிக அதிகமாக இருப்பதாக ஃபார்முலா-1 அமைப்பு புகார் தெரிவித்தது.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

இதுகுறித்து மத்திய அரசிடம் போட்டியை நடத்திய ஜேபி இன்டர்நேஷனல் குழுமம் மேற்கொண்ட பேச்சுகளும், முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதனால், இந்தியாவிலிருந்து ஃபார்முலா-1 கார் பந்தயம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது கார் பந்தய பிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

மேலும், ஃபார்முலா-1 பந்தயம் நடத்துவதற்கான தரத்தில், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டும் ஃபார்முலா-1 போட்டிகள் களை இழந்தது. தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நடத்தப்படுகின்றன.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

இந்த நிலையில், ஃபார்முலா-1 போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மீண்டும் துளிர்விட்டுள்ளன. ஆம். ஃபார்முலா-1 போட்டி நடத்தும் அமைப்பு அண்மையில் கைமாறியது. ஃபார்முலா-1 அமைப்பை வாங்கியிருக்கும் லிபர்டி மீடியாவின் உரிமையாளர் சேஸ் கரே இப்போட்டியை விரிவுப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

அதன்படி, பல புதிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஃபார்முலா-1 போட்டிக்கு இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!

அடுத்த ஆண்டு 21 போட்டிகளை நடத்த லிபர்டி மீடியா திட்டமிட்டுள்ளது. அப்போது, ஃபார்முலா-1 போட்டிகளை நடத்துவதற்கு புதிய நாடுகள் சேர்க்கப்படும். அந்த வகையில், மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 போட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த செய்தி கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Read Articles
English summary
Formula One Might Return To India; Future Of Indian GP Looks Bright.
Story first published: Tuesday, September 19, 2017, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X