Just In
- 5 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்துக்கு வடபோச்சே... ரூ.7,000 கோடியுடன் ஆந்திராவில் லேண்ட் ஆனது கியா!
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
நீண்ட யோசனைக்கு பின்னர் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கியா மோட்டார்ஸ்.
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் கியா கார் நிறுவனம். இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், கார் விற்பனையை துவங்க திட்டமிட்டது.
இதற்காக, இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிட்டது. தமிழகம், குஜராத், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கார் ஆலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் சென்னை அருகே கார் தொழிற்சாலை அமைத்ததால், அதே வழியில் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் கார் ஆலை அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
பெரிய அளவிலான முதலீடும், வேலைவாய்ப்பும் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இறுதியில் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது கியா மோட்டார்ஸ். இதற்காக, ஆந்திர அரசுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கியா மோட்டார்ஸ்.
மேலும், 1.1 பில்லியன் டாலர் (ரூ.7,055 கோடி) ஆந்திராவில் அமைக்கப்படும் கார் ஆலையில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது கியா மோட்டார்ஸ். ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் இந்த புதிய கார் ஆலை அமைய இருக்கிறது.
கியா கார் ஆலை 536 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆலை கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்த புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்கப்படும். ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த கார் ஆலை அமைக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஹூண்டாய் கார் ஆலையில் இருந்து அனந்த்பூரில் அமைய இருக்கும் கியா கார் ஆலை 400 கிமீ தொலைவில் இருப்பதால், உதிரிபாகங்கள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஏதுவாக இருக்கும். அத்துடன், கியா நிறுவனத்தின் புதிய கார் ஆலையில் ஹூண்டாய் கார்களையும் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் 40 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் கார் உற்பத்தியை துவங்க கியா திட்டமிட்டுள்ளது. படிப்படியாக, உள்ளூர் உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. முதலாவதாக, எஸ்யூவி மாடல் ஒன்றையும், செடான் கார் மாடலையும் அறிமுகம் செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழல்களால், இந்த கார் ஆலை திட்டம் கைவிட்டு போய் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், ஆரம்பத்தில் கியா மோட்டார்ஸ் ஆலை தமிழகத்திற்கு வரும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது ஆந்திராவுக்கு அந்த ஆலை திட்டம் கிட்டி இருக்கிறது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!