Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Movies Prithviraj: ரஜினியை வைத்து தில்லுமுல்லு மாதிரி படம் இயக்கனும்.. பிரித்விராஜ் ஆசையை பாருங்க!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆட்டோவிற்கு மாற்றாக அமையுமா மின்சார ரிக்ஷாக்கள்: மஹிந்திராவின் புது அதிரடி பிளான்..!!
இந்தாண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் ரிக்ஷாக்களை தயாரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நிறுவனம்.
உலக நாடுகளிலுள்ள பல கார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அதிக திறன் கொண்ட மின்சார காரை தயாரிக்க மஹிந்திரா பின்னின்ஃபெரினா உடன் கைக்கோர்த்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் ரூ.600 கோடியை முதலீடு செய்கிறது. இதன்மூலம் ரூ.1200 கோடிக்கான வர்த்தகம் உருவாக்கப்படும் என மஹிந்திராவின் தலைமை அதிகாரி
பவன் கோயென்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் திறன்களில் கார்களை தயாரித்து வருகிறது.
இவற்றுடன் 360 முதல் 600 வோல்ட் திறன் கொண்ட புதிய மின்சார ஆற்றலை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மின்சார ஆற்றல் பினின்ஃபெர்னா முத்திரை உடன் கொண்ட ஆடம்பர காரிலும் பொருத்தப்படும் என பவன் கோயென்கா கூறுகிறார்.
இந்த சூப்பர் ஆற்றல் பெற்ற காரில் மட்டுமில்லாமல், சிறிய ரக மின்சார பேருந்துகள் மற்றும் அதிக திறன் பெற்ற மற்ற மாடல் வாகனங்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் 2018ல் அந்நிறுவனம் மின்சார பேருந்துகளை வெளியிடுகிறது. அதே ஆண்டின் இறுதிக்குள் மின்சார ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா தயாரிக்கவுள்ள மின்சார பேருந்துகள் 9 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் என்று தலைமை அதிகாரி பவன் கோயென்கா தெரிவிக்கிறார்.
இந்தியாவில் மஹிந்திரா தயாரிக்கும் அனைத்து மின்சார வாகனங்களும் பூனாவின் சக்கன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகும் என்று தெரிகிறது.
மின்சார வாகனத்திற்கான சந்தை இந்தியாவில் வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதில் மஹிந்திராவிற்கு இணையாக டாடாவும் அதிரடியாக மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.