Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார் விற்பனையில் குளறுபடி செய்த மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்..!
விற்பனையில் குளறுபடி செய்ததால் மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் மெர்சிடிஸ் பென்ஸ் டீலருக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரை சேர்ந்த ரஞ்சன் ஜெயின் என்பவர் கடந்த 2015ல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை அங்குள்ள பகத் ஆட்டோமோடிவ் என்ற டீலரிடம் வாங்கியுள்ளார்.
அவர் கார் வாங்கியது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதமாகும். இந்த காருக்கான நீட்டிக்கப்பட்ட ஒரு வருட வாரண்டியை வேறு டீலரிடம் வாங்கியுள்ளார் ரஞ்சன்.
ஆனால், அந்த பாலிசி பத்திரத்தில் கார் வாங்கிய மாதமான அக்டோபர் 2015க்கு பதிலாக ஏப்ரல் 2015 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஞ்சன் வாங்கிய காருக்கு மெர்சிடிஸ் நிறுவனம் 3 ஆண்டுகள் வாரண்டி தந்துள்ளது.
இத்துடன் சேர்த்து நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை வாங்கிக் கொள்வது நல்லது என்ற அடிப்படையில் ரஞ்சன் இந்த திட்டத்தில் இணைந்தார்.
வாங்கப்பட்ட புதிய காருக்கு நிறுவனம் அளிக்கும் வாரண்டி காலம் முடிவடைந்த பின்னர் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி காலம் துவங்கும்.
இந்த அடிப்படையில் ரஞ்சன் வாங்கியுள்ள காருக்கு 3 ஆண்டுகள் அதாவது அக்டோபர் 2018 வரை நிறுவனத்தின் வாரண்டி காலம் ஆகும்.
கூடுதலாக இவர் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற்றுள்ளதால் மொத்தமாக இவரின் கார் வாரண்டியானது அக்டோபர் 2019 வரை இருக்க வேண்டும்.
ஆனால் பாலிசி பத்திரத்தில் ரஞ்சனின் காருக்கான வாரண்டி ஏப்ரல் 2019 உடன் முடிவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக வாரண்டி வாங்கிய டீலரிடம் சென்று முறையிட்டுள்ளார் ரஞ்சன். அவருக்கு சரியான தீர்வை டீலர் தராததால் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக முறைகேடாகவும், குளாறுபடியும் செய்து தன்னிடம் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முறையிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரஞ்சன்.
இந்த நோட்டீசை ரஞ்சனின் வழக்கறிஞர் கடந்த ஜூன் 4, 2016 ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலமாக அந்த டீலருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில் முறைகேடாக தேதியை மாற்றி என்னிடம் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் இந்த காருக்கு பதிலாக புதிய காரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், புதிதாக காரை மாற்றித்தர இயலாது என்றாலும் இதற்கு தீர்வு அளிக்கப்படும் என்று ரஞ்சனுக்கு டீலர் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மேற்கொண்டு டீலரிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த பிரச்சனையை நுகர்வோர் மன்றத்திற்கு எடுத்துச் சென்றார் ரஞ்சன்.
செகண்ட் ஹேண்ட் காரை புதிது எனக்கூறி ஷோரூம் நிர்வாகத்தினர் தன்னிடம் விற்பனை செய்துவிட்டதாகவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மெர்சிடிஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தில் இது டீலர் செய்த தவறு என்றும் எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பின்னர், ரஞ்சனுக்கு கார் விற்பனை செய்யப்பட்ட தேதியில் குளறுபடி நடந்துள்ளது என்பதனை மெர்சிடிஸ் டீலரான பகத் ஆட்டோமோடிவ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
வாடிக்கையாளரான ரஞ்சனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தினால் ரூ.3.5 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!