Just In
- 8 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 17 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்னும் 8 ஆண்டுகளில் அழிந்துபோகும் பெட்ரோல், டீசல் வாகனங்கள்; புத்துணர்ச்சி பெறும் மின்சார ஆற்றல்..!
2030ம் ஆண்டிற்குள் உலகளவில் வாகனங்கள் மின்சார ஆற்றல் கொண்டு இயங்கும் என ஸ்டார்ண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப மாற்றங்களில் புதிய கட்டமைப்புகள் அறிமுகமாகும் போது, அதை சார்ந்த பழைய வழிமுறைகள் ஏதாவது வழக்கொழிந்து போகும்.
இந்த வரிசையில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாடு உலகளவில் மறைந்து விடும் என, அதுவும் இன்னும் 8 ஆண்டுகளில் நடக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வல்லுநர் டோனி செபா, உலகளவில் நடைபெற்று வரும் மரபு சார்ந்த எரிபொருள் 2030ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக முடிந்துவிடும் என்கிறார்.
மேலும், பெட்ரோலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு மின்சாரம் ஆற்றலாக அமையும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சமீபத்தில் இதுப்பற்றிய ஆய்வு கட்டுரை சமர்பிக்கப்பட்டது. அதில் கிடைத்த சில முடிவுகளை வைத்தே டோனி இவ்வாறு கூறுகிறார்.
மரபு சார்ந்த எரிபொருட்களில் முதலீடு செய்யப்படுவதை விட மின்சார துறை சார்ந்த செயல்பாடுகளில் இனி முதலீடு செய்தால் அது லாபமாக அமையும் என்பது டோனியின் கருத்தாக உள்ளது.
'ரீதிங்கிங் டிரான்ஸ்போர்ட்டேஷன் 2020-2030' என்ற பெயரில் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகம் உலகளவில் நடத்திய ஆய்வில்,
எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை திறன் ஆகியவற்றை சார்ந்து நடக்கவுள்ள சில மாற்றங்கள் பற்றியும் தெரியவந்துள்ளன.
- மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, பல வாடிக்கையாளர்கள் அதில் தானியங்கி வாகன தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.
- பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை பராமரிப்பதை விட மின்சார வாகனங்களின் பராமரிப்பு 10 மடங்கு குறைவாகும்.
- இதனால் எரிசக்திக்கு ஆகக்கூடிய செலவு என்று எதுவுமில்லை என்பது கூடுதல் சிறப்பு
- மின்சார வாகனங்கள்- 16,10,240கி.மீ (குறைந்தபட்சம்)
- மரபு சார்ந்த எரிபொருட்கள் கொண்ட வாகனங்கள்- 3,22,000கி.மீ (குறைந்தபட்சம்)
போன்ற தரவுகள், இந்த ஆய்வின் மூலம் மின்சார வாகன உற்பத்தியை பலப்படுத்தும் விதத்தில் கிடைத்துள்ளன.
இனி வரும் காலங்களில் பெட்ரோல் நிலையங்கள், உதிரிபாகங்கள் போன்ற தேவைகள் விலகுவதை நாம் கண்கூடாக பார்க்கலாம் என்கிறது ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு.
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை புரிந்துக்கொண்டுள்ள பல முன்னணி கார் நிறுவனங்கள், தங்களிடமுள்ள தயாரிப்புகளை விரைவில் விற்க பெரும் திட்டங்களை தயாரித்து வருவதாக பொருளாதார நிபுணர் டோனி செபா கூறுகிறார்.
புவிவெப்பமயமாதலை தடுக்க மின்சார வாகன சந்தையை பல நாடுகள் நிச்சயமாக ஊக்குவிக்கும். அதனால் மின்சாரம் நிச்சயம் வாகனங்களுக்கு ஆற்றலாக மாறும்.
வாகனங்களிலிருந்து வெளியாகும் CO2 மற்றும் NOx போன்ற நச்சு வாயூக்களை தடுக்க, சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் எஞ்சினகளுக்கு தான் இந்தியா உட்பட பல உலக நாடுகள் அனுமதி தருகின்றன.
மின்சார வாகன பயன்பாட்டிற்கு உலகளவில் அடித்தளம் அமைத்த நாடு நார்வே தான். அங்கு மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கு மட்டுமே அனுமதி என்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், பொது போக்குவரத்து ஊர்திகள் பல இன்னும் பெட்ரோலில் தான் இயங்கி வருகின்றன.
இருந்தாலும், கனரக வாகனங்களுக்கும் மின்சாரத்தை ஆற்றலாக மாற்றும் முயற்சியில் நார்வே அரசு தீவிரமாக வேலை செய்து வருகிறது.
ஆனால் நார்வேவிற்கு முற்றிலும் மாற்றாக இஸ்ரேல் நாட்டில், மின்சார வாகன பயன்பாடு என்பது கனரக வாகனங்களில் மூலம் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சீனா, தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பல நாடுகளும் மின்சார அற்றலுக்கு மாற ஆய்த்தமாகி வருகின்றன.
இந்த வரிசையில் இந்தியாவிலும் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றல் கொண்டு இயக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய அரசு துவங்கிவிட்டது. மின்சார ஆற்றலை ஆட்டோமொபைல் துறையில் செயல்படுத்த பெரும்பாலும் நார்வே நாட்டை இந்தியா பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகன கால் டாக்ஸி சேவை வரும் 26ம் தேதி நாக்பூரில் அறிமுகப்படுத்துப்படுகிறது.
இதில் கிடைக்கும் வரவேற்பை வைத்து இந்திய அரசு தேசியளவில் மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டங்கள் அமைக்கலாம் என தெரிகிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!