Just In
- 42 min ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 2 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சைபர் திருடர்களால் ’ஹேக்’ செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவனம்: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்
ரெனால்ட் நிறுவனம் சைபர் திருடர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த பின்னணி காரணங்கள் இங்கே விரிவாக
ஃபிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் சென்னை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
ரெனால்ட் தனது உற்பத்தியை நிறுத்த பெட்ரோல் பஞ்சமோ, இரும்பு தட்டுபாடோ, ஆக்கத்திறன் குறைப்பாடோ அல்லது பொருளாதார மந்தைநிலையோ காரணமல்ல.
உலகம் முழுவதும் பரவி வரும் சைபர் தாக்குதலால் (சில செய்தி ஊடகங்கள் அந்த தாக்குதலை வானா கிரை என்று குறிப்பிடுகின்றன) 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய பயணாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான ரொனால்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரெனால்ட் நிறுவனத்திற்கான ஆலைகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக தனது உற்பத்திய ரெனால்ட் நிறுத்தி உள்ளது.
மேலும் இதே தாக்குதல் ஃபிரான்ஸ் உட்பட சில நாடுகளில் நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. சென்னை ஒரகடம் அருகில் இயங்கி வரும் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கூட்டு ஆலையிலும் உற்பத்தி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் குறித்து பாரீஸ் நகரில் பேசிய ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தொழில்நுட்பவியலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படாமல் தவிர்க்கவே, சைபர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நாடுகளில் ரெனால்ட் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இதற்காக தகுந்த ஆதாரங்களுடன் ஃபிரான்ஸ் நாட்டு காவல்துறையை ரெனால்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனுகியுள்ளதாகவும்,
அதற்கான நடவடிக்கைகளை ஃபிரான்ஸ் காவல்துறை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும், ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பாரீஸில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை ஆலை ஃபிரான்ஸ் நாட்டில் வடமேற்கு பகுதியான சண்டோவில்லே பகுதியில் அமைந்துள்ளது. அங்கும் சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், அதனால் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் ரெனால்ட் செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஆனால் பல்வேறு நாடுகளில் உள்ள ரெனலாட் ஆலைகளில் எங்கெங்கெல்லாம் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பதை பற்றிக்கூற அவர் மறுத்துவிட்டார்.
உலகளவில் சுமார் நூறு நாடுகளில் உள்ள ரெனலாட் நிறுவனத்தின் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உலகளவில் ரெனால்ட் நிறுவனத்தில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிப்படைந்துள்ளதாக ஃபிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரெனால்டுக்கு போட்டி நிறுவனமான உள்ள பி.எஸ்.எ-வில் இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்று செய்திதொடர்பாளர் பாரீஸில் தெரிவித்துள்ளார்.
ரெனலாட்-நிசான் நிறுவனங்களில் கூட்டு ஆலை சென்னை ஒரகடம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ரெனலாட் சந்தேகத்தின் பெயரில் தான் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் காவல்துறை இணையத்தில் மால்வேர் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இதை கருத்தில்கொண்டு இந்தியாவில் நிசான் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்