Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்கபோவதில்லை; ரோல்ஸ்-ராய்ஸ் திட்டவட்டம்..!!
ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்கபோவதில்லை; ரோல்ஸ்-ராய்ஸ் திட்டவட்டம்..!!
ஹைஃபிரிட் காய்ச்சல் ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைஃபிரிட் காரை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆடம்பர காரை விரும்பும் பலர் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்குமா என்பதை உற்று நோக்கி வருகின்றனர்.
பல ஆட்டோமொபைல் செய்தி ஊடகங்களும் ரோல்ஸ்-ராய்ஸ் ஹைஃபிரிட் கார்களை தயாரித்தால் அதை தலைப்புச் செய்தியாக்க காத்திருக்கின்றன.
இத்தனை பேரது எதிர்பார்ப்புகள் மற்றும் காத்திருப்பிற்கு தொடக்கப்புள்ளிகளை வைக்காமல், முற்றுப்புள்ளி வைத்து காரியத்தை முடித்து வைத்துவிட்டது ரோல்ஸ்-ராய்ஸ்.
ஆம், ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் ஈடுபடபோவதில்லை என ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இன்றைய ஆட்டோமொபைல் உலகின் தலைப்புச்செய்தியாகி உள்ளன.
'ஆட்டோ கார்' ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ரோல்ஸ்-ராய்ஸின் தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ் மின்சார கார் தயாரிப்பு தான் எதிர்காலம், இதற்கு இடையில் ஹைஃபிரிட்டில் ரோல்ஸ்-ராய்ஸ் கவனம் செலுத்த போவதில்லை என தெரிவித்திருக்கிறார்.
"எஞ்சின்கள் இல்லாத கார் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலங்கள் உள்ளன. எது எப்போது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. ஆனால் எஞ்சினுக்கான தேவை குறைந்துக்கொண்டே வருகிறது" எனவும் முல்லர் ஓட்வோஸ் பேசியுள்ளார்.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று உலகளவில் தனி இடம் உள்ளது. அதை பொறுத்தவரை மின்சார கார்கள் தான் எதிர்காலம் என்றாலும், ஹைஃபிர்ட் கார்களுக்கு ஒரு பெரிய சந்தை உருவாகுமா என்று அந்நிறுவனம் சந்தேக்கிறது.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை உலகளவில் பல கார் பிரியர்களிடம் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.
குறிப்பாக அந்நிறுவனத்திடம் இருந்து, சத்தமே இல்லாமல் செயல்படும் மின்சார கார், தானாக இயங்கும் திறன் பெற்ற கார் போன்றவற்றை தயாரிக்க பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வருகின்றன.
ஆனால் இது போன்ற தொழில்நுட்பம் பெற்ற கார்களை தயாரிப்பதில் ரோல்ஸ்-ராய்ஸ் நிலை என்ன என்பதில் தெளிவில்லை என்றாலும், தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ் ஹைஃபிரிட் கார்கள் தயாரிப்பதை முற்றிலுமாக மறுத்து விட்டார்.
ஆனால் இந்த சந்திப்பின் போது, பேசிய தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ், தற்போது தான் ஹைஃபிரிட் கார்கள் தயாரிப்பதில் எண்ணமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகமாக இருந்தால், இந்த முடிவை மாற்றிக்கொள்ளும் எண்ணத்திலும் ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளது.