Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆயிரக்கணக்கான சொகுசு கார்களின் உற்பத்தியை திடீரென நிறுத்திய பிஎம்டபுள்யூ: காரணம் இதுதான்..!!
ஜெர்மன், சீனா, தென் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக பி.எம்.டபுள்யூ அறிவிப்பு
உதிரிபாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள திடீர் தடங்கலால் பி.எம்.டபுள்யூ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் தயாரிப்பு பணிகளை முடிக்க முடியாமல் திணறி வருகிறது.
கார்களை தயாரிப்பது என்பது மிக சாவலான காரியம். அதிலும் சொகுசு கார்கள் என்றால் அதிலிருக்கும் சாவல்கள் பன்மடங்கு பெரியது. இதனாலேயே பி.எம்.டபுள்யூ நேரத்தை சரியாக கடைபிடிக்கும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெற்ற பிறகே கார்களை தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ, நேரத்தை பின்பற்றுவதில் ஒரு தொழில்ரீதியான அனுகுமுறையை வைத்துள்ளது.
ஆர்டர்களுக்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலோடு கார்களை தயாரித்து வந்த பி.எம்.டபுள்யூ மீது இன்று யார் கண்பட்டதோ தெரியவில்லை.
உலகளவில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களின் தயாரிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
இத்தாலி நிறுவனத்திடமிருந்து உதிரிபாகங்கள் உரிய நேரத்தில் கிடைக்கததால், கடந்த வெள்ளி முதல் பி.எம்.டபுள்யூ கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஜெர்மனி, சீனா, தென் ஆஃபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் தயாரிப்பு பணிகள் அப்படியே நிற்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.எம்.டபுள்யூ குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்கஸ் டியூஸ்மன் ஒரு சிறு துரும்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும், கார்களின் மொத்த உற்பத்தியையும் அது பாதித்து விடும் என்று கூறினார்.
ஒரு வாரத்தில், பி.எம்.டபுள்யூ உலகளவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் சுமார் 17,500 கார்களை தயாரிக்கும்.
தற்போது இந்த சிக்கல் காரணமாக, சுமார் 360 கோடி வரை பி.எம்.டபுள்யூ வருமானம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபுள்யூ 1-4 சிரீஸ் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அதுவே 550 மில்லியன் அமெரிக்கன் டாலர் வரை அந்நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தும்.
இருந்தாலும் வெள்ளி அன்று ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால் பி.எம்.டபுள்யூ எவ்வளவு மில்லியன் டாலர்கள் வருமானம் இழந்துள்ளது என்று தெரியவில்லை. அதைக்குறித்து அந்நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் பி.எம்.டபுள்யூ-விற்கு உதிரிபாகங்களை அதிகாரப்பூர்வமாக சப்ளை செய்து வருவது பாஷ் நிறுவனம் தான் என்றும், இத்தாலியில் உள்ள அதனுடைய மற்றொரு நிறுவனத்திடம் பாஷ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளி முதல் பி.எம்.டபுள்யூ வின் 1 மற்றும் 2 சிரீஸ் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது, ஆனால் ஐ8 மற்றும் ஐ3 கார்களின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருதாக பி.எம்.டபுள்யூவின் செய்தி தொடர்பாளர் ஜோசின் முல்லர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சப்ளை தொடர்பான பிரச்சனைகளை பி.எம்.டபுள்யூ வருடத்தில் ஒருமுறையாவது சந்தித்து விடுவது வழக்கம் தான். அதை சமாளிக்கும் முறையையும் அந்நிறுவனம் நன்றாக கற்று வைத்துள்ளது.
பி.எம்.டபுள்யூ-விற்கு முன் வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு பல ஆர்டர்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் அளவில் உற்பத்தி பாதிப்பை சந்தித்தது.
ஆனால் அந்த நேரத்தில் வோக்ஸ்வேகன் கார்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததால் பேரிழப்பை சந்திப்பதில் இருந்து அந்நிறுவனம் தப்பித்தது.
உதிரிபாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு, கார்களின் உற்பத்தி நாளை முதலே தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக பி.எம்.டபுள்யூ-வின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!