Just In
- 26 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்த டாடா எல்க்ஸி தீவிரம்!
டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்த டாடா எல்க்ஸி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பதில் பல முன்னணி கார் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவில் டிரைவரில்லாமல் இயங்கும் காரை சோதனை ஓட்டம் நடத்தும் முயற்சியை டாடா எல்க்ஸி நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முயற்சிகளை டாடா எல்க்ஸி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக, அரசிடம் அனுமதியும் கோரியிருக்கிறது. இரண்டு செடான் கார்களில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களுக்காக டாடா எல்க்ஸி உருவாக்கி உள்ள தொழில்நுட்பத்தை இணைத்து பரிசோதித்து பார்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு செடான் கார்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செடான் காராக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செடான் கார்களில் ஏராளமான சென்சார்கள், கேமரா மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரின் புறநகர் பகுதிகளில் இந்த கார்கள் ஏற்கனவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறதாம். நகர்ப்புற சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக டாடா எல்க்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே டாடா எல்க்ஸி நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்தது. கடந்த 2014ம் ஆண்டில் டாடா ஸெஸ்ட் காரில் அந்த தொழில்நுட்பத்தை இணைத்து பாதுகாக்கப்பட்ட வழித்தடத்தில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தியது. மேலும், 2015ம் ஆண்டில் தானியங்கி முறையில் பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்து காட்டியது.
இந்த நிலையில், தற்போது பொது சாலைகளில் வைத்து டிரைவரில்லாமல் இயங்கும் கார்கள் சோதனை ஓட்டம் நடத்துகிறது டாடா எல்க்ஸி நிறுவனம்.
இந்திய சாலைகளில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இயக்குவது சாத்தியமில்லாதது என்று பல முன்னணி கார் நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பல சவால்களை கடந்து டாடா எல்க்ஸி நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2017 ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள்!
புதிய ஃபோர்டு மஸ்டாங் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை கீழே உள்ள கேலரியில் சென்று பார்க்கலாம்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?