Just In
- 41 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் கார்கள்!
டொயோட்டாவின் கொரோலா ஆல்டிஸ் கார்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டொயோட்டா, அதன் கொரோலா ஆல்டிஸ் மாடல் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2.9 மில்லியன் ஆல்டிஸ் கார்களை திரும்பப்பெற உள்ளது டொயோட்டா நிறுவனம்.
கொரோலா ஆல்டிஸ் கார்களில் உள்ள ஏர்பேக்குகளில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த திரும்பப்பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் டகாடா நிறுவனத்தால் இந்த ஏர் பேக்குகள் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்தியா, ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய ஓசியானா பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 2.9 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
2010 - 2012 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்த ஆல்டிஸ் கார்கள் தயாரிக்கப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ஓசியானா பகுதிகளில் 1.16 லட்சம், ஜப்பானில் 7.5 லட்சம், இந்தியாவில் 23,000 ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்படும் என டொயோட்டா அறிவித்துள்ளது.
டகாடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகளில் பயன்படுத்தப்படும் உலர்த்தும் கலவை இல்லாத அம்மோனியா நைட்ரேட் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் தயாரித்து அளித்த சந்தையில் இருந்த 100 மில்லியன் ஏர்பேக்குகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
முன்னதாக 2013ஆம் ஆண்டில் இதேபோல டகாடா நிறுவன ஏர்பேக்குகளால் தொடர்ச்சியான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க ஆட்டொமொபைல் வரலாற்றில் அதிகபட்சமாக 42 மில்லியன் கார்கள் திரும்பப்பெறப்பட்டது நினைவுகூறத்தக்கது.
டொயோட்டாவின் இந்திய வர்த்தக நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, டீலர்கள் மூலமாக இலவசமாக இப்பிரச்சனை சரிச்செய்துதரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 கொரோலா ஆல்டிஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் உள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய கொரோலா ஆல்டிஸ் கார், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15.87 லட்சம் முதல் ரூ.19.91 லட்சம் வரையில் கிடைக்கிறது. (எக்ஸ் - ஷோரூம், டெல்லி)
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு