Just In
- 10 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 38 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 2 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2015 முதல் பாரத் ஸ்டேஜ்-5 மாசு விதி அமல்: முக்கிய அம்சங்கள் விபரம்
வரும் 2015ம் ஆண்டு முதல் பாரத் ஸ்டேஜ்-5 மாசுக் கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வர இருக்கிறது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை அதிகரிக்கும். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை குறைக்கும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை உள்பட நாட்டின் முதலாம் நிலை நகரங்களில் பாரத் ஸ்டேஜ்-4 விதியும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பாரத் ஸ்டேஜ்-3 விதியும் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில், தாறுமாறாக உயர்ந்து வரும் வாகன எண்ணிக்கையால் சுற்றுச் சூழலுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதிக வாகன புழக்கம் மாநகரங்களில் பாரத் ஸ்டேஜ் -5 விதியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு தக்கவாறு கார்பன் புகை வெளியீட்டு அளவு குறித்த நிபந்தனைகள் தற்போது கார் நிறுவனங்களுக்கு அனுப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
எஞ்சினில் மாற்றம்
பாரத் ஸ்டேஜ்- 5 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ற வகையில் குறைந்த கார்பனை வெளியிடும் வகையில் கார் எஞ்சினில் சில மாறுதல்களை தயாரிப்பாளர்கள் செய்ய வேண்டும்.
எரிபொருள் தரம்
பெட்ரோல் மற்றும் டீசலின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். எரிபொருளில் 10 பிபிஎம் அளவுக்குள் சல்ஃபர் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவியாதலால் காற்று மாசு
வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் புகை போன்றே, வாகன தொட்டியிலிருந்து ஆவியாகும் பெட்ரோல், டீசலாலும் அதிக அளவில் காற்று மாசுபடுவதாக தெரியவந்துள்ளது.
ஆவியாதலை தடுக்கும் கட்டமைப்பு
பாரத் ஸ்டேஜ்-5 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளில் மிக முக்கிய அம்சமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆவியாதலை தடுப்பதற்கான விசேஷ தடுப்புகளுடன் கட்டமைக்க வேண்டும் என்பதும் இருக்கும். தற்போது இருந்தாலும், இன்னும் சிறப்பான கட்டமைப்பு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக்கிலும் பொருத்த வேண்டும்
பார்க்கிங் செய்யப்படும்போது பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலிருந்து பெட்ரோல் ஆவியாதலை தடுக்க சிறப்பு கன்ட்ரோல் யூனிட் கண்டிப்பாக பொருத்த வகை செய்யப்பட்டுள்ளது.
மைலேஜ் லேபிள்
புதிய விதி அமலுக்கு வரும்போது மைலேஜ் லேபிளுடன் கார்களை விற்பனை செய்வதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் தரும் கார்களின் விபரங்களை எளிதாக ஒப்பிட்டு பார்த்து வாங்க முடியும்.
பாதுகாப்பு அம்சங்கள்
கிராஷ் டெஸ்ட் எனப்படும் கார்களின் கட்டுமானம் குறித்த தர சோதனை விதிகளை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கட்டுமானம் கொண்டதாக கார்கள் வரும். ஒருவேளை விபத்து ஏற்பட்டால்கூட பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த கட்டமைப்பு இருக்கும்.
எரிபொருள் கசிவு தடுப்பு
விபத்தின்போது எரிபொருள் கசிவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வகையில் இந்த கட்டுமானம் இருக்கும்.
கதவுகள் திறக்கும் வசதி
விபத்தின்போது கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதியையும் காரில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சைல்டு சீட்
குழந்தைகளுக்கான சைல்டு சீட் பொருத்துவதற்கான வசதி இருப்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
விலை அதிகரிக்கும்
புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வரும்போது கார் எஞ்சின் மற்றும் கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டியிருப்பதால் கார் விலை 1.5 முதல் 2.5 சதவீதம் வரையிலும், பைக்குகளின் விலை 2 சதவீதம் வரையிலும் அதிகரிக்கும். இதுதவிர, எரிபொருளின் தரம் அதிகரிக்கப்படுவதால் அதிலும் விலேயேற்றம் இருக்கும்.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!