Just In
- 20 min ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- 35 min ago பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
- 1 hr ago உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
- 1 hr ago 900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!
Don't Miss!
- Finance கௌதம் அதானி வாழ்க்கையை மாற்றி பெண் பல் டாக்டர்.. யார் இவர்..?
- Lifestyle பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- Sports சீன் போட்றதுல எந்த குறைச்சலும் இல்ல.. வெறும் பனியன் உடன் விமான நிலையம் சென்ற ஹர்திக் பாண்டியா
- News 100க்கு 100 பொய்யான கேள்வி.. பாஜகவின் மாயாஜாலம்.. அத்தனையும் பித்தலாட்டம்.. திமுக தாக்கு
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Movies Actress Nayanthara: புடவையிலும் ஜொலிக்க முடியுமா.. மீண்டும் நிரூபித்த நயன்தாரா!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சீரியல் கில்லரான சீன மாஞ்சா நூல்... கண்ணாடி கூரை கார் உரிமையாளர்களே உஷார்!
டெல்லியில், காற்றாடி பறக்கவிட பயன்படும் மாஞ்சா நூல் வாகனத்தில் செல்வோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு காரின் கண்ணாடி கூரை வழியாக வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுமியும், 4 வயது சிறுவனும் மாஞ்சா நூல் கழுத்தை இறுக்கியதில் பரிபாபமாக உயிரிழந்தனர்.
அதுமட்டுமில்லாமல், நேற்று ஒரே நாளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பறவைகள் மாஞ்சா நூலால் காயமடைந்துள்ளன. கண்ணாடி கூரை கொண்ட காரில் தாயின் மடியில் நின்றபடி வேடிக்கை பார்த்தபடி சென்ற, சாஞ்சி கோயல் என்ற 3 வயது சிறுமியின் கழுத்தில் எங்கிருந்தோ எமன் போல வந்த மாஞ்சா நூல் கழுத்தை இறுக்கியது.
இதில், அந்த சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கமடைந்து தாயின் மடியிலேயே விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், அருகிலிருந்து மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோன்று, கண்ணாடி கூரை வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஹாரி என்ற 4 வயது சிறுவனும், மற்றொருவரும் மாஞ்சா நூலால் உயிரை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் டெல்லியில் வாகனங்களில் செல்வோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. காற்றாடி பறக்கவிட பயன்படும் மாஞ்சா நூல் சீனாவில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாஞ்சா நூலில் கண்ணாடி தூள் தோய்க்கப்பட்டு வருவதால், இது கழுத்தில் பட்டவுடன் பிளேடு போன்று அறுத்துவிடுவதாக கூறப்படுகிறது. இது விலை மலிவாக இருப்பதும், இளைஞர்கள் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, சீன மாஞ்சா நூலை காற்றாடிகளில் பயன்படுத்த டெல்லி அரசு நேற்று அதிரடி தடை விதித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையிலும் பல உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. . ஆண்டுதோறும் மார்ச் மாத துவக்கத்திலிருந்து வட சென்னையிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதும், உயிர்கள் பறிபோவதும் வாடிக்கையாக உள்ளது.
சென்னையில், மாஞ்சா நூல் காற்றாடிகளுக்கு மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும், அதனை பலரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், மாஞ்சா நூல் எமனிடம் இருந்து தப்பிப்பதற்கு, கண்ணாடி கூரை கார்களில் செல்வோர், தங்களது குழந்தைகளை வேடிக்கை பார்க்க அனுமதிப்பதை முடிந்தவரை தவிர்ப்பதே நலமாக அமையும்.
-
பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
-
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
-
31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! மாருதி கூட சேந்து பெரிய சம்பவத்த பண்ணீட்டாங்க!