கோவா போலீசின் ரோந்து காராக மாறும் டாடா நானோ

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 16:03 [IST]
Tata Nano
ரோந்து பணியில் கோவா போலீசார் டாடா நானோ காரை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை போலீசார் ரோந்து பணிகளில் சோதனை முறையில் டாடா நானோ காரை பயன்படுத்தி வருவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது மும்பை போலீசாரை பின்பற்றி கோவா போலீசாரும், ரோந்து பணிகளில் டாடா நானோ காரை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோந்து பணியின்போது சந்து போந்துகளில் கூட நானோ காரில் சென்று கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்பதால் இந்த முடிவை கோவா போலீசார் எடுத்ததாக தெரிகிறது.

மேலும், ரோந்து பணிகளுக்காக சில நானோ கார்கள் கோவா போலீசார் வாங்கியுள்ளாதாகவும், அந்த கார்கள் கோவா போலீசாரின் பிரத்யேக வண்ணத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், கண்காணி்ப்பின்போது உடனடி தகவல் பரிமாற்றங்களுக்காக வாக்கி டாக்கி உள்ளிட்ட நவீன சாதனங்களும் அந்த நானோ கார்களில் பொருத்தப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
English summary
We had earlier reported about the Tata Nano being considered as a patrol car by the Mumbai police. The Nano is an ideal patrol vehicle as it can travell easily through narrow lanes and can also offer all weather protection to policemen who work 24/7. The Mumbai police have tested the car and the results are not yet out.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !