Just In
- 29 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
300 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட உலகின் நீளமான பஸ்
யங்மேன் ஜேஎனஅபி6250ஜி என்று பெயரிப்பட்டுள்ள இந்த பஸ் 25 மீட்டர் நீளம் கொண்டது. சாதாரண பஸ்களை விட 13 மீட்டர் அதிகம் நீளம் கொண்டது. ஏற்கனவே, வால்வோ நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கும் பஸ்களை விட இது நீளமானது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் ஹாங்கோ நகரங்களில் இயக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு மெட்ரோ ரயில் போல இருக்கும் இந்த பஸ் 3 பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக ஏறி இறங்க வசதியாக 5 வாசற்படிகள் இருக்கின்றன.
பஸ் ரொம்ப நீளமாக இருந்தாலும் 40 பேர் மட்டுமே உட்கார்ந்து செல்ல முடியும். மீதமுள்ளோர் மெட்ரோ ரயிலில் செல்வது போன்று நின்று கொண்டுதான் பயணம் செய்ய முடியும்.
மணிக்கு அதிகபட்சமாக இந்த பஸ் 80 கிமீ வேகத்தில் செல்லும். ஜெர்மனியை சேர்ந்த மேன் நிறுவனத்தின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
மேலும், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியி்ல் அமர வைத்து இந்த பஸ்சில் ஏற்றிச் செல்லும் வகையில் தாழ்தள படிகட்டுகளை கொண்டிருக்கிறது. பஸ் உட்புறத்திலும் சக்கர நாற்காலியே நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
பெருகி வரும் மக்கள்தொகை பெருக்கத்தை சமாளிக்க இந்த புதிய பஸ் உதவும் என்று பீஜிங் மாநகர போக்குவரத்து துறை தெரிவிக்கிறது.