Just In
- 41 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெற்றோர் பரிசளித்த கே.டி.எம் டியூக் 390 பைக்கில் ஸ்டண்ட் செய்து உயிரிழந்த 15 வயது சிறுவன்..!!
அனுபவம் இல்லாத வயதில் பைக் போன்று சக்தி வாய்ந்த ஒரு பொருள் கிடைத்தால், அதன் விளைவு என்னாவாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
புதியதாக வாங்கிய கே.டி.எம் பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்று அது தவறாக சென்றதால் விபத்து ஏற்பட்டு பதினைந்து வயது சிறுவன் ஒருவன் பலி ஆனான்.
டெல்லியில் வசித்து வந்த மொஹமத் உமர் ஷேக் என்ற 15 வயது பள்ளிச் சிறுவனுக்கு, பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.எம் டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி தந்தனர்.
அந்த சிறுவன் தன் வீட்டின் அருகில் வசிக்கும் மொஹமத் அனாஸ் என்ற இளைஞருடன்புதியதாக வாங்கிய கே.டிம்.எம் பைக்கில் சம்பவம் நடந்த நாளன்று ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான்.
சிறுவன் மொஹமத் உமர் பைக்கை ஓட்ட, பில்லியனில் மொஹமத் அனாஸ் அமர்ந்திருந்தார். அப்போது நடைபெற்ற விபத்தால் சம்பவ இடத்திலேயே சிறுவன் மொஹமத் உமர் ஷேக் பலி ஆனான்
இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, அவர்கள் இருவரும் கே.டி.எம். டியூக் 390 பைக்கில் ஸ்டண்ட் செய்து வந்ததாக கூறியுள்ளார்.
திடீரென தரையில் விழுந்த பைக் உருகுலையும் நிலைக்கு சென்றதாக கூறினார். இதனால் பைக்கில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தால் சிறுவன் மொஹமத் உமர் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரழக்க பில்லியனில் அமர்ந்திருந்த இளைஞர் மொஹமத் அனாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி, சாஸ்திரி பூங்கா அருகே நடைபெற்ற இந்த விபத்தை குறித்து அப்பகுதி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கில், மொஹமத் உமர் ஷேக் அதிவேகத்தில் பைக் இயக்கியதால் கட்டுபாடு இழந்து விபத்து ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு படிக்கும் மாணவனான மொஹமத் உமர் ஷேக் தனது பெற்றோரிடம் கே.டி.எம். டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி தர தினமும் கேட்டுக்கொண்டு வந்துள்ளான்.
பெற்றோர்கள் முடியாது என்று மறுத்தும், மொஹமத் உமரின் தொந்தரவு தாங்க முடியாததால், இறுதியாக சமீபத்தில் மகன் கேட்ட கே.டி.எம் டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி அவனுக்கு பரிசளித்துள்ளனர்.
பைக் ஓட்டுவதில் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களே ஸ்டண்ட் செய்யும் போது கவனத்துடன் இருப்பார்கள். அதற்கு பைக்கை கட்டுபாட்டில் வைத்திருக்கும் திறன் வேண்டும்.
அந்த திறன் பைக்கை நாம் தொடர்ந்து இயக்கும் அனுபவத்தின் மூலம் தான் அடைய முடியும். அந்த அனுபவம் கிடைக்கும் வரை நமக்கு பொறுமையும் தீவிர முயற்சியும் வேண்டும்.
அதனால் தான் அரசு 18 வயது நிரம்பிய பின் ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்தி உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த பைக் போன்ற பொருளை, அதற்கான புரிதல் இல்லாத வயதில் கிடைத்தால் இதுபோன்ற சோகம் தான் நடக்கும்.
18 வயதில் ஓட்டுநர் உரிமம் கிடைத்து விட்டால், நீங்கள் வாகனங்களை எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்று அர்த்தமாகாது.
பைக்கில் ஸ்டண்ட் போன்ற சாகசங்களை செய்ய அதற்கு முறையான பயிற்சி வேண்டும். அதற்கான திறனை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும்.
பிள்ளைகள் கேட்கிறார்கள் என பெற்றோர்கள் பைக் போன்ற பொருளை வாங்கி தருவது சிறந்த வழிகாட்டி தனம் அல்ல.
பைக் போன்ற ஒரு சாதனத்தை புரிந்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகள் இயக்க அவர்களுக்கு திறன் உள்ளதா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும்.
சிறந்த பெற்றோராக இருக்கவேண்டும் என்று உங்கள் குழந்தைகளின் உயிரை பணையம் வைக்கும் காரியங்களை என்றும் செய்யாதீர்கள்.
நட்பு, பாசம், காதல் ஆகியவற்றை யாரு வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளிடத்தில் காட்டலாம். ஆனால் பெற்றோர் என்பவர்கள் மேல் கூறிய உணர்வுகளுடன் கண்டிப்பையும் சிறுது அதிகமாக பிள்ளைகள் மீது வைக்கத்தான் வேண்டும்.