Just In
- 14 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உலகின் மிகப்பெரிய ஏ380 பயணிகள் விமானத்திற்கு புத்துயிர் கொடுக்கும் ஏர்பஸ்!
ஏர்பஸ் ஏ380 ப்ளஸ் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரியது ஏர்பஸ் ஏ380 விமானம். உலகின் மிகப்பெரிய விமானம் என்பதுடன், பல்வேறு சொகுசு வசதிகளையும், சிறப்பம்சங்களையும் இந்த விமானம் பெற்றிருக்கிறது.
அதேநேரத்தில், நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை இயக்குவதற்கான செலவு மிக அதிகம் இருப்பதால், ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் எதிர்காலம் கேள்விக் குறியானது.
போயிங் 777 விமானத்தைவிட சற்றே கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் பெற்றிருப்பதும், இயக்குதல் செலவு அதிகம் இருப்பதும் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கான பின்னடைவாக இருந்து வருகிறது. ஆர்டர்கள் குறைந்ததால், இந்த விமானத்தின் உற்பத்தியை நிறுத்துவதற்கும் ஏர்பஸ் பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில், பெரும் முதலீடு மற்றும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ஏ380 விமானத்தை கைவிட ஏர்பஸ் நிறுவனத்துக்கு மனது வரவில்லை. விமான பொறியியலின் உன்னத படைப்பான ஏ380 விமானத்திற்கு புத்துயிர் கொடுக்க ஏர்பஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஏ380 விமான மாடலின் விபரங்களை பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிவித்துள்ளது. ஏ380 ப்ளஸ் என்ற பெயரில் இந்த விமான மாடலை உருவாக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இறக்கையின் இருமுனைகளிலும் விங்லெட் அமைப்பின் நீளம் அதிகரிக்கப்பட இருக்கிறது. மேல்நோக்கிய விங்லெட் 3.5 மீட்டர் நீளமும், கீழ்நோக்கிய விங்லெட் 1.2 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். இதனால், காற்றுடனான உராய்வு வெகுவாக குறைந்து 4 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் பெற முடியும். டர்புலென்ஸ் காரணமாக ஏற்படும் எரிபொருள் இழப்பும் குறையும்.
இதன்மூலமாக, இந்த விமானத்தை இயக்குவதற்கான செலவு 13 சதவீதம் வரை குறையும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது. எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி, மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் மேம்படுத்த இருக்கிறது ஏர்பஸ்.
இதுதவிர, இரண்டு தளங்களையும் இணைப்பதற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சுருள் வடிவிலான மாடிப்படிகளை சாதாரண படிகள் கொண்ட அமைப்புடன் மாற்றவும் ஏர்பஸ் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கூடுதலாக 80 இருக்கைகள் கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, அதிகபட்சமாக 575 பயணிகள் வரை செல்ல முடியும்.
பராமரிப்பு இடைவெளியிலும் மாற்றம் செய்யப்பட இருப்பதால், அதற்கான செலவீனமும் குறையும். இதன்மூலமாக, ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஏர்பஸ் ஏ380ப்ளஸ் விமானம் அதிகபட்சமாக 578 டன் எடையை சுமந்து கொண்டு மேல் எழும்பும் திறனை பெற்றிருக்கும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த விமானம் மிகவும் குறைவான சப்தம் கொண்ட விமானம் என்று பயணிகள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதனை இந்த புதிய மாடல் மேலும் சிறப்பாக்கும் என்று நம்பலாம்.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!