Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆட்டோ ஓட்டுநருக்கு புதிய சுப்ரோ வாகனத்தை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவன தலைவர்..! காரணம் இது தான்!!
மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். எதற்காக என்பதை விரிவாக காணலாம்.
இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் விவசாயத்துறை முதல் விண்வெளித்துறை வரையிலான தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் நான்கு மற்றும் இருசக்கர வாகன விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது.
காலம் சென்ற ஜேசி மஹிந்திராவினால் மும்பையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவரான ஆனந்த் மஹிந்திரா தாராள மனம் படைத்தவர் என பெயரெடுத்தவர்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் சிந்துவிற்கு தார் ஜீப்-பை பரிசாக அளித்த இவர் தற்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு சக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார்.
அட சாக்ஷி மற்றும் சிந்துவிற்கு பரிசளிக்க ஒரு பெரும் காரணம் இருந்தது, ஆனால் ஆட்டோ ஓட்டுநர் அப்படி என்ன செய்தார் பரிசளிக்க என்ற கேள்வி எழலாம்..!
கேரளாவைச் சேர்ந்த சுனில் என்ற ஆட்டோ ஓட்டுநர் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் டிசைன் மீது ஈர்ப்பு கொண்டவராவார்.
எனினும், ஸ்கார்பியோ கார் வாங்கும் அளவுக்கு பணவசதி இல்லாத காரணத்தால் தான் ஓட்டும் ஷேர் ஆட்டோவை ஸ்கார்பியோ போல கஸ்டமைஸ் செய்துள்ளார்.
சுனிலின் ஆட்டோவின் பின்பகுதி அப்படியே ஸ்கார்பியோ காரின் பின்பகுதி போலவே காட்சியளிக்கிறது.
ஸ்கார்பியோ காரின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாகவே, தன்னுடைய சொற்ப வருமானத்திலும் ஸ்கார்பியோ கார் போலவே தன் ஆட்டோவையும் மாற்றியமைத்துள்ளார் சுனில்.
ஸ்கார்பியோ போல மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவின.
பலதரப்பினரையும் கவர்ந்த சுனிலின் ஆட்டோ விரைவிலேயே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
|
சுனிலில் ஆட்டோவால் ஈர்க்கப்பட்ட அனில் பனிக்கர் என்ற வலைவாசி ஒருவர், இந்த புகைப்படங்களை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவிற்கு டேக் செய்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
ஸ்கார்பியோ டிசைன் எந்த அளவுக்கு இந்தியர்களை கவர்ந்துள்ளது என்று இந்த படங்கள் உணர்த்தும் என்று ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து அதில் ட்வீட் செய்திருந்தார்.
அனில் பனிக்கரின் இந்த ட்வீட்டை கண்ட ஆனந்த் மஹிந்திரா, ஸ்கார்பியோ போல் மாற்றியமைக்கப்பட்ட சுனிலின் ஆட்டோவால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.
|
அனிலில் ட்வீட்டிற்கு அளித்த பதிலில் இந்த ஆட்டோ ஓட்டுநர் இருப்பிடத்தை கண்டறிய உதவுங்கள் அவருக்கு மூன்று சக்கர வாகனத்திற்கு பதிலாக நான்கு சக்கர வாகனத்தை பரிசளிக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் மியூசியத்திற்காக இந்த ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவை வாங்க விரும்புவதாக்வும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தார்.
ஒருவழியாக ஆனந்த் மஹிந்திராவின் டிவீட்டிற்கு பதில் கிடைத்தது. ஆம் ஆட்டோ ஓட்டுநரான சுனிலில் இருப்பிடத்தை கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான புல்லாத் என்ற பகுதியில் சுனில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவிற்கு பதிலாக புதிய சுப்ரோ நான்கு சக்கர வாகனத்தை சுனிலிர்கு பரிசாக அளித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
ஸ்கார்பியோ டிசைன் ஆட்டோவிற்கு பதிலாக புதிய சுப்ரோ நான்கு சக்கர வாகனத்தை பரிசளித்த புகைப்படத்தையும் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த்.
சொன்னது போலவே நிஜத்திலும் செய்து காட்டிய ஆனந்த் மஹிந்திராவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
புதிய சுப்ரோ வாகனத்தை பரிசாக பெற்ற ஆட்டோ ஓட்டுநரான சுனில் ஆனந்தின் செயலால் பூரிப்படைந்துள்ளார்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!