Just In
- 13 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 49 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார் பந்தய வரலாற்றில் மிகவும் இளம் வயதில் முத்திரை பதித்த இந்திய வீரர்...!
ஜிபி-3 கார் பந்தயத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் இளம் இந்திய வீரர் ஒருவர். அது குறித்த தகவல்களை காணலாம்.
ஜிபி3 சீரீஸ் என்று அழைக்கப்படும் கிராண்ட் ஃபிரிக்ஸ்-3 கார் பந்தயமானது ஃபார்முலா-1 கார் பந்தயம் போன்று தனிப்பட்ட நெறிமுறைகளோடு நடத்தப்படும் ஒரு கார் பந்தயமாகும். இது உலகின் பல நாடுகளில் பல்வேறு சுற்றுக்கள் கொண்டதாக உள்ளது.
பிரபலமான ஜிபி-2 சீரீஸ் கார் பந்தயங்களின் கீழ் நிலையில் ஜிபி-3 சீரீஸ் உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் இந்தப் பந்தயம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த 19வயதே ஆன இளம் இந்திய கார் பந்தய வீரரான அர்ஜூன் மைனி இந்த ஆண்டிற்கான ஜிபி-3 சீரீஸ் பந்தயத்தில் பங்கேற்று முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஜிபி-3 சீரீஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெரும் முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அர்ஜூன் மைனி படைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அர்ஜூன் மைனி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜென்சர் மோட்டார் ஸ்போர்ட்' என்ற கார் பந்தய குழுவில் இடம்பிடித்துள்ளார். இந்தக் குழு வளர்ந்து வரும் வீரராக அர்ஜூனை ஒப்பந்தம் செய்துள்ளது.
பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற கேட்டலுன்யா கார் பந்தய சர்க்யூட்டில் நடைபெற்ற இப்போட்டியில், புகழ்பெற்ற ஃபிரான்ஸ் நாட்டு வீரரான டோரியன் போகோலேகி மற்றும் சக குழுவைச் சேர்ந்தவரான அலெஸியோ லோரண்டி ஆகியோரை முந்தி வெற்றி வாகை சூடியுள்ளார் அர்ஜூன்.
போட்டியின் தொடக்க கட்டத்தில் மிகவும் சவாலை சந்தித்த அர்ஜூன் முதல் லேப்பிலேயே ரவுல் ஹைமேனை பின்னுக்குத்தள்ளி முன்னிலையை ஏற்படுத்தினார்.
இந்த முன்னிலை 5 லேப்புகள் வரை நீடித்தது, எனினும் 6வது லேப்பில் மீண்டும் தென்ஆப்பிரிக்க வீரரான ரவுல் ஹைமேன் முதல் இடத்திற்கு முந்தினார். அடுத்த சில நொடிகளிலே ரவுல் ஹைமேனை மீண்டும் முந்தி முன்னிலையை அடைந்த அர்ஜீன்
பின்னர் பந்தயத்தை வென்று தனது முதல் ஜிபி 3 பந்தயத்தையும் வென்றுஅசத்தினார்.
இதன் மூலம் ஜிபி- 3 பந்தயத்தில் வாகை சூடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த 19வயதே ஆன அர்ஜூன் படைத்துள்ளார்.
அர்ஜூன் தனது 8வது வயதில் இருந்தே கார் பந்தயக் களத்தில் கலக்கி வருகிறார். 2008ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த கோ கார்ட் பந்தயத்தில் வென்று, வெளிநாடுகளில் நடந்த கோ கார்ட் பந்தயத்தில் குறைந்த வயதில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர் ஆவார்.
அர்ஜூன் மைனியின் தந்தை கவுதம் தேசிய அளவிலான கார் பந்தயங்களில் கலந்து கொண்ட வீரர் ஆவார். மேலும் அர்ஜூனின் சகோதரர் குஷ் மைனியும் ஒரு கார் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அர்ஜூன் இடம்பிடித்துள்ள அதே ஜென்சர் மோட்டார்ஸ்போர்ட் கார் பந்தயக் குழுவில் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!